ஒருமைமன தாகியே அல்லலற நின்னருளில் | ஒருவன்நான் வந்திருக்கின் | உலகம் பொறாததோ மாயாவிசித்ரமென | ஓயுமோ இடமில்லையோ | அருளுடைய நின்னன்பர் சங்கைசெய் திடுவரோ | அலதுகிர்த் தியகர்த்தராய் | அகிலம் படைத்தெம்மை யாள்கின்ற பேர்சிலர் | அடாதென்பரோ அகன்ற | பெருமைபெறு பூரணங் குறையுமோ பூதங்கள் | பேய்க்கோல மாய்விதண்டை | பேசுமோ அலதுதான் பரிபாக காலம் | பிறக்கவிலை யோதொல்லையாம் | இருமைசெறி சடவினை எதிர்த்துவாய் பேசுமோ | ஏதுளவு சிறிதுபுகலாய் | இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி | எங்குநிறை கின்றபொருளே. |