வேதாவை இவ்வணம் விதித்ததே தென்னின்உன் | வினைப்பகுதி என்பன்அந்த | வினைபேச அறியாது நிற்கஇவை மனதால் | விளைந்ததால் மனதைநாடில் | போதமே நிற்குமஅப் போதத்தை நாடிலோ | போதமும் நினால்விளக்கம் | பொய்யன்று தெய்வமறை யாவுமே நீயென்று | போக்குவர வறநிகழ்த்தும் | ஆதார ஆதேயம் முழுதுநீ யாதலால் | அகிலமீ தென்னைஆட்டி | ஆடல்கண் டவனுநீ ஆடுகின் றவனுநீ | அருளுநீ மௌனஞான | தாதாவு நீபெற்ற தாய்தந்தை தாமுநீ | தமருநீ யாவுநீகாண் | சர்வபரி பூரண அகண்டதத் துவமான | சச்சிதா னந்தசிவமே. |