அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே | ஆரமிர்தே என்கண்ணே அரிய வான | பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப் | பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே | கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக் | காலமுந்தே சமும்வகுத்தக் கருவி யாதி | இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும் | விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே. |