பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

287
     அல் - இரவு; இருள். விழுங்குதல் - அடக்குதல். அவித்தை - அறியாமை. வேதம் - வேறுபாடு.

(21)
 
தானான தன்மயமே யல்லால் ஒன்றைத்
    தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே
போனாலுங் கர்ப்பூர தீபம் போலப்
    போயொளிப்ப தல்லாது புலம்வே றின்றாம்
ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற
    ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்
ஆனாலும் இதன்பெருமை எவர்க்கார் சொல்வார்
    அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்.
     "தானான . . . இன்றாம்" - (சிவபெருமான்) தானேயான தன்மயமே அல்லாமல் வேறாக ஒன்றையும் முனைத்துத் தலையெடுக்க வொட்டாது; அறிவுமுனைத்துத் தனித்துத்தலையெடுப்பதுபோற் காணப்பட்டாலும், அங்ஙனந்தோன்ற வொட்டாது கருப்பூரச் சுடர் போன்று அருள் வெளியினுள் அடங்கிப் போவதன்றி உயிரறிவு வேறாக நிற்பதன்றாம்.

     "ஞானாகா . . . சொல்லும்" - பேரறிவுப் பெருவடிவுடன் சேர்ந்து, அப் பேரறிவுப் பெரும் பொருளை வேறுகாண்டலும், காணுகின்ற உயிர்தன்னைப்பிரித்து வேறுகாண்டலும் ஆகியசெயல்கள் (எவ்வாறகன்றதென்று தெரிய வொண்ணாதபடி) நழுவி நிற்கும்; அங்ஙனமாயினும் திருவடிப்புணர்ப்பின் மெய்ம்மைச் சிறப்பினை எத்திறத்தார்க்கும் யாவர் எடுத்துக் கூறுவர்; (அச் சிவமாகிய) அதனுடன் அருளால் கூடினால் அப்பொருளே, அதன் சிறப்பினை (உணர்விற்குணர்வாய் உண்ணின்றுணர்த்தி) உரைக்கும்.

     (வி - ம்.) கர்ப்பூரதீபம்; ஏனைய எரிபொருள் பற்றி எழுஞ்சுடர் அனைத்தும் சாம்பல் மட்டும் எஞ்சி ஆற்றல் வெளியின்கண் விரவும். ஆனால், கர்ப்பூரதீபம் எஞ்சுதலின்றி ஆற்றலாய் வெளியின்கண் விரவும். இதுபோல் மாயாகாரியப் பொருள்கள் உருவாய்த்தோன்றிக் காரணத்தின் கண் அருவாய் ஆற்றலாய் ஒடுங்கும். ஆனால், ஆருயிர் உருவம் அருவம் இரண்டு் மிலதாய் அப்பால் நிலையிலுள்ள திருவடியிற் புணர்ந்து மீளா ஆளாய் எஞ்சுதலின்றி இணைந்து இன்புறும்.

(22)
 
அதுவென்றால் எதுவெனவொன் றடுக்குஞ் சங்கை
    ஆதலினால் அதுவெனலும் அறவே விட்டு
மதுவுண்ட வண்டெனவுஞ் சனக னாதி
    மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தா ரென்றும்