பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

373
திருவடிச் சிறப்பு வருமாறு :

"திருவடி யேசிவ மாவது தேரில்
 திருவடி யேசிவ லோகஞ் சிந்திக்கில்
 திருவடி யேசெல் கதியது செப்பில்
 திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே."
- 10. 182.
"சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
 சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ்
 சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
 சிவசிவ என்னச் சிவகதி தானே."
- 10. 2667.
    (இதன்கண் ஒன்பது "சிவ" என்னும் செந்தமிழ் மந்திரம் அமைந்துள்ளன. இத் திருப்பாட்டைப் பன்னிருமுறை ஓத நூற்றெட்டுச் சிவமாம்.)
(2)
இடைந்திடைந் தேங்கி மெய்புள கிப்ப
    எழுந்தெழுந் தையநின் சரணம்
அடைந்தனன் இனிநீ கைவிடேல் உனக்கே
    அபயமென் றஞ்சலி செய்துள்
உடைந்துடைந் தெழுது சித்திரப் பாவை
    யொத்துநான் அசைவற நிற்பத்
தொடர்ந்துநீ எனைஆட் கொள்ளுநா ளென்றோ
    சோதியே ஆதிநா யகனே.
    (பொ - ள்.) பேரொளிப் பிழம்பே! அனைத்திற்கும் வினைமுதற் காரணமாக வுள்ள தலைவனே! விலகி, விலகி, வருந்தி அழுது உடம்பெலாம் மயிர்பொடிப்ப, அழகிய நின்திருவடியை அடைந்தனன்; உனக்கே அடைக்கலமென்று கைகூப்பி, உள்ளம் உருகி உருகிக் கைபுனைந்தெழுதிய சித்திரப்பாவையை ஒத்து அசைவற்று அடியேன் நிற்கும்படி, அடிகள் அடியேனைத் தொடர்ந்து ஆட்கொண்டருளும் நாள் எந்நாளோ? எளியேனைக் கைவிட்டுவிடாதே.
(3)
ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம்
    யாவுமற் றகம்புறம் நிறைந்த
சோதியாய்ச் சுகமா யிருந்தஎம் பெருமான்
    தொண்டனேன் சுகத்திலே இருக்கப்
போதியா வண்ணங் கைவிடல் முறையோ
    புன்மையேன் என்செய்கேன் மனமோ
வாதியா நின்ற தன்றியும் புலன்சேர்
    வாயிலோ1 தீயினுங் கொடிதே.
 1. 
'ஐம்புல வேடரின்.' சிவஞானபோதம் நூற்பா. 8.