பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

415
மண்ணும் விண்ணும்மற் றுள்ளன பூசமும் மாறாப்
பெண்ணும் ஆணுமாய் அல்லவாய் நிற்கின்ற பெரியோய்.
    (பொ - ள்.) கலப்பினால் மண்ணுலகமாகியும், அதுபோல விண்ணுலகமாகியும், ஏனை நீர், நெருப்பு, காற்று, வானமாகிய பூதங்களாகியும், உடம்பெடுத்த உயிர்களனைத்தும் விட்டு நீங்காது ஒட்டி வாழும் ஆண் பெண்ணா 1 கியும், பொருட்டன்மையால் இவையனைத்தும் அல்லவாய் நிற்கின்ற பிறவாயாக்கைப் பெரியோனே, கண்ணிற் கருமணியென நின் திருவடியினைத் தொழும் மெய்யன்பர்களின் தூயவுள்ளத்தின்கண் மிக்கோங்கித் திகழ்கின்ற நின்திருவருள் அடியேனுக்கு எந்தநாள் கிடைக்குமோ? (உடனே தந்தருளவேண்டுமென்பதாம்.)

(23)
சகமெ லாந்தனி புரந்தனை தகவுடைத் தக்கோர்
அகமெ லாநிறைந் தானந்த மாயினை அளவில்
மகமெ லாம்புரிந் தோரைவாழ் வித்தனை மாறா
இகமெ லாமெனைப் பிறந்திடச் செய்ததேன் எந்தாய்.
    (பொ - ள்.) அனைத்துலகங்களையும் பொதுவறக் காத்தருள் செய்தனை; (இருவினையொப்பு, மலபரியாகா, திருவருள் வீழ்ச்சி திருவருள் வலத்தால் எய்தப்பெற்ற) தகுதியுடைய தக்கோர் தூய உள்ளமெல்லாம் மேலோங்கி நிறைந்து நின்று பேரின்பப் பெரும் பெருக்கு ஆகியருளினை; பெரும்பயனைத் தரும் அளவில்லாத சிவ வேள்வியினைப் புரிந்த செந்நெறிச் செல்வர்களைத் திருவடிப்பேறளித்து வாழ்வித்தருளினை; எளியேனை நீங்காமல் மீண்டும் மீண்டும் இவ்வுலகிடைப் பிறந்திடுமாறு செய்தருளியது எதன்பொருட்டு? எளியேன் தந்தையே! சிவ வேள்வியின் சீர்மை வருமாறு :

"ஆதி மாமறை விதியினால் ஆறுசூழ் வேணி
 நாத னாரைமுன் னாகவே புரியுநல் வேள்வி
 தீது நீங்கநீர் செய்யவும் திருக்கழு மலத்து
 வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்."
- 12. சம்பந்தர், 429.
    கொலைபுலை இல்லாக் குணமுறு நல்வேள்வி, நிலைசிவன்றாள் கூட்டுதல் வேள்வி எனும் மெய்ம்மையினைத் தமிழ்மறையின்கண் காண்க.

(24)
ஏய்ந்த நல்லருள் பெற்றவர்க் கேவலாய் எளியேன்
வாய்ந்த பேரன்பு வளர்க்கவுங் கருணைநீ வளர்ப்பாய்
ஆய்ந்த மாமறை எத்தனை அத்தனை அறிவால்
தோய்ந்த பேர்கட்குந் தோன்றிலாத் தோன்றலாந் தூயோய்.
 1. 
'அவையே தானேயாயிரு' சிவஞானபோதம், நூற்பா. 2.