அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப | அன்பினா லுருகிவிழிநீர் | ஆறாக வாராத முத்தியின தாவேச | ஆசைக் கடற்குள் மூழ்கிச் | சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி | தழுதழுத் திடவணங்குஞ் | சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்க னேனையுத் | தண்ணருள் கொடுத்தாள்வையோ | துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள் | தொழுதருகில் வீற்றிருப்பச் | சொல்லரிய நெறியைஒரு சொல்லா லுணர்த்தியே | சொரூபாங பூதிகாட்டிச் | செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள்வளர் | சித்தாந்த முத்திமுதலே | சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே | சின்மயா னந்தகுருவே. |