"மந்த்ரகுருவே - மௌனகுருவே" - செந்தமிழ் மறையருள் மந்திர குருவே அகத்தவ இறைவனூ லருள் யோகதந்திர குருவே (தனித் தமிழாகமம் அருள்) திருமூலர்மரபில் வந்தருளிய மௌனகுருவே, (இவ்வுரையினை இத்தலைப்பு முடியும் வரை கூட்டிக் கொள்க.)
(வி - ம்) ஆசை - அவா. நிகளம் - விலங்கு; சங்கிலி. நீர்த்தூளி - முழு அறிவு; சருவநாசம். எற்றி - எறிந்து. விலாழி - யானைத் துதிக்கை உமிழ்நீர். சுளித்து - சினந்து. படாம் - சீலை. நூறி - நசுக்கி. சின்முத்திரை - அறிவடையாளம். தந்திரம் - இறைவனூல்.
இப் பாட்டால் பெறப்படும் உருவகம் வருமாறு:
ஆசை - சங்கிலி. ஆங்காரம் - முளை. அத்துவிதம் - மதம். மதம் ஆறு - ஆறுயாறுகள். பாசம் - நிழல். மனம் - கவனம். மாயை - முக படாம். சின்முத்திரை - தோட்டி. ஆருயிர் - மத்தயானை.
ஆசையெனினும் அராகம் எனினும் ஒன்றே. அவ்வுண்மை வருமாறுணர்க :
| "விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண் |
| இச்சையைப் பண்ணி நிற்குந் தொழிலறி விச்சை மூன்றும் |
| வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி யான்மா |
| நிச்சயம் புருட னாகிப் பொதுமையின் நிற்பன் அன்றே." |
| - சிவஞானசித்தியார், 2. 3-6. |
| | "தூசா மணியுந் துகிலும் புனைவாள் | | நேசா முருகா நினதன் பருளால் | | ஆசா நிகளந் துகளா யினபின் | | பேசா அனுபூதி பிறந் ததுவே." | | - கந்தரனுபூதி. 43 |
| "அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை | | வஞ்சிப்ப தோரும் அவா." | | - திருக்குறள், 1 - 66. |
| "ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் | | ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் | | ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் | | ஆசை விடவிட ஆனந்த மாமே." | | - 10. 2570 |
முக்கூற்றுப் புறச்சமயங்கள் மூன்று :
(புறப்புறம்) - உலகாயதம், மாத்தியமிகர், யோகாசரர், சௌத்திராந்திகர், வைபாடிகள், (பௌத்தம்) ஆருகதர்.
(புறம்) தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம்.
|