பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

107

நெல்வேலி வென்ற என்ற அடையினால் அவர் பொருது வென்ற மன்னர் என்பதையும், வாயிலார் தொன் மயிலை என்ற அடியினால் சிறப்பிக்கப்பட்டு அவர் ஊர் இன்னது என்பதையும், முனையடுவார். அறைக்கொண்ட வேல்நம்பி என்று கூறப்பட்டு, அவர் பகைவரை அறைதலையும் வேல் கொண்டிருந்ததையும், நம்பி என்ற சிறப்புப் பெயர்பெற்றதையும், கழற்சிங்கர் என்பார், உலகெலாம் காக்கின்றபெருமான் காடவர்கோன் என்ற சிறப்பால் பல்லவ மன்னர் என்பதையும், இடங்கழியார்க்கு மடல் சூழ்ந்த தார் நம்பி என அவர்தம் மாலைச்சிறப்பையும், செருத்துணையார் தஞ்சை மன்னர் என்ற சிறப்பால் அரசர் என்பதையும், புகழ்த்துணையார் இறைவர் பொன்னடியில் மனம் வைத்தவர் என்ற சிறப்பால் அவர் சிவபெருமானிடம் கொண்ட பற்றையும், கோட்புலியார் அடல்சூழ்ந்த வேல் நம்பி எனப்பட்டு, அவர்தம் வீரத்தையும், பூசலார் மறைநாவன் நின்றவூர் என்ற அடைகளால் பிராம்மணர், திருநின்றவூரினர் என்பதையும், மானி (மங்கையர்க்கரசியார்) மாதராள் என்பது வரிவளைக்கையாள் என்ற அடையினால் அறியப்படுதலையும் (நேச நாயனார் எந்த அடைமொழியும் இன்றிக் குறிப்பிடப்பட்டவர்) கோச்செங்கட் சோழர் தென்னவனாய் உலகாண்ட என்ற அடையினால் செங்கோல் செலுத்திய மன்னர் என்பதையும், திருநீலகண்டத்துப் பாணனார் என்பதனால் இவர் பாணர்மரபினர் என்பதையும் சடையனார் இசைஞானியார் திருநாவலர் கோன் என்ற தால் சுந்தரர் இவ்விருவர் தம் பிள்ளை என்பதையும், அரனடியே அடைந்திட்ட என்னும் அடை இறைவன் திருவடியில் கொண்ட அன்பையும் அறிகின்றோம். தில்லை வாழ் அந்தணர், பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர், திருவாரூர் பிறந்தவர், முப்போதும் திருமேனிதீண்டுவார், முழுநீறுபூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்தார் ஆகிய இவர்கள் தொகையடியாராகக் கருதப்பட்டவர்கள்.  இவர்கள் பெயர்களாலேயே இன்னார் என அறியப்படுதலின், அடை