ப
படைகளைக் கீழே விட்டவர்.
அவன் தம்மைக் கண்டிப்ப நின்றவர்.
கண்ணப்பர்
வேடர், திருக்காளத்தியார் கண்ணில் இரத்தம் கண்டு, நடுங்கித் தம் கண்களை இடந்து அப்பினவர்.
குங்கிலியக்கலயர்
திருக்கடவூரினர்.
தம் துணைவியார் தாலியைக் கொண்டு குங்கிலியம் கொண்டு இறைவர்க்கு அப்புகை ஊட்டும் தொண்டினர்.
திருப்பனந்தாளில் சாய்ந்திருந்த சிவலிங்கத்தைத் தம் கழுத்துடன் கயிற்றை இணைத்து இழுத்து நேரே
நிலைக்க செய்தவர்.
மானக்கஞ்சாறர்
கஞ்சாறூரினர். இவரது திருமகளார் கூந்தலைப் பஞ்சவடிக்குத் தேவை என்று தவசி கேட்ட போது
அரிந்து கொடுத்தவர்.
அரிவாட்டாயர்
கணமங்கலம் என்னும் ஊரினர். சிவபெருமானுக்கு எனக் கொணர்ந்த ‘அமுது’ சிந்திவிட, அதனை
அமுதாகக் கொள்ளாவிடில், என் தலையை வெட்டிக் கொள்வேன் என்று தம் வாளைத் தம் தலையோடு பூட்டியவர்.
ஆனாயர் குழல்
மூலம் இசை பாடி இறைவனை இன்புறச் செய்தவர். மேல் ஈழநாட்டு மங்கலம் என்னும் ஊரின் ஆயர்.
மூர்த்தியார்
மதுரையில் தோன்றியவர். மதுரைச் சொக்கலிங்கப் பெருமானார்க்குத் தம் முழங்கையைத் தேய்த்துச்
சந்தனம் கொண்டு வழிபட்டு உலகாண்டவர். சமணன் ஆவதைவிடச் சாவது மேல் எனக் கருதியவர்.
முருகனார்
அந்தணர். திரும்புகருலூரினர். ஐந்தெழுத்து ஓதுபவர். மலர்த் தொண்டு புரிபவர். திருஞான சம்பந்தர்
தோழர்.
உருத்திர
பசுபதியார் நீரில் நின்று இரவும் பகலும் உருத்திர மந்திரம் சொல்பவர். திருத்தலை என்னும்
ஊரினர்.
|