New Page 1
முனையடுவார்:
திருநீடூர்த் தலைவர், போர் முனையில் நின்று போரிடுபவர். தோற்றவர்களோடு தாம் சேர்ந்து
வெற்றி கண்டு அவர் தரும் கூலி கொண்டு அப்பொருளைச் சிவனடியார்கட்கு ஈந்தவர்.
கழற்சிங்கர்:
திருவாரூர்த் தியாகர்க்கு வைத்த மலரைத் தம் மனைவி கையால் எடுத்து மோந்ததனால் அவர் கையை
அரிந்தவர்.
இடங்கழியார்:
சிதம்பரச் சிற்றம்பல முகட்டினுக்குப் பொன் வேய்ந்த ஆதித்த சோழன் மரபினர். இருக்கு வேளூரினர்.
தம் செல்வம் சிவனடியார்கட்கு உரியது எனப்பறை அறைந்து அறிவித்தவர்.
செருத்துணையார்:
கழற்சிங்கர் தேவியார் தியாகர்க்கு என வைத்த மலரை மோந்த காரணத்தால் மூக்கை அரிந்தவர்.
தஞ்சை ஊரினர்.
புகழ்த்துணையார்:
திருப்பத்தூரினர். வறுமையால் வாட்டம் உற்றவர். ஒருநாள் இறைவர் திருவடிமேல் முழுக்குநீரைக்
கொட்டும்போது தளர்ச்சியினால் கலசத்தை முடியில் போட்டு நடுங்க, இறைவர் திருவருளால் நிதி
பெற்றவர்.
கோட்புலியார்:
திருநாட்டியத்தான் குடியினர் தலைவர். திருநாவலூரர் அருள் பெற்றவர். தம் சுற்றத்தாரை வெட்டி
வீழ்த்தியவர்.
பத்தராய்ப்பணிவார்:
திருவாரூர்பிரான் திருவடிபணிந்தவர். மயிர்சிலிர்க்க ஆனந்த நீர்பொழிய உடல் நடுங்க,
வாய்குழறப் பக்திபூண்டு வணங்குபவர்.
பரமனையே
பாடுவார்: வடமொழி தென்மொழிகளால் தில்லைப்பரமனைப்பாடுவார்.
சித்தத்தைச்
சிவன்பாலே வைத்தவர்: இறைவன் திருவடிகளில் சித்தம் வைத்தவர். இவர்கள் வீடு பேறு எய்தியவர்.
|