பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

115

    திருவாரூர்: பிறந்தார்; சிவகணத்துள்ளவர்.  இவர் சேவடிகளே செல்வநெறி அடையச் செழுநெறி ஆகும்.

    முப்போதும் திருமேனி தீண்டுவார்: இவர்கள் ஆகம நெறியில் வணங்கி அர்ச்சிப்பார். சிவனார் உலகில் அழியாச் செல்வத்தில் அமர்ந்தவர்.

    முழுவீறு பூசிய முனிவர்: உலக கலங்கினும் ஊழி திரியினும், உள்ளம் ஒருகாலும் விலகுதல் இல்லாதவர்.  திருவாரூர் அமர்ந்த அரனடிக்கீழ் விளங்கும் வெண்ணீற்றைத் தம் திருமேனியில் அணிபவர்.

    அப்பாலும் அடிச்சார்ந்தார்: இறைவன் திருவடிகளில் சுந்தரர்க்குப்பின் அன்பு பூண்டு சார்பவர்கள்.  சிவனார் கணத்தைச் சார்ந்தவர் நம் செழுந்தவர்.

    பூசலார்: திருநின்றவூரினர்.  இறைவனுக்கு ஒரு கோயில் எப்போது கட்டிமுடிப்பது என எண்ணியவர்; அவ்வெண்ணத்தை உறக்கம் இன்றி, இரவும் பகலும் எண்ணி இறை அருள் பெற்றவர்.

    மங்கையர்க்கரசியார்: பாண்டிமாதேவியார்.  மானியார்.  தம் கணவனாரது வெப்புநோய் கண்டு, அது  பொறாது சம்பந்தர்க்கு அறிவித்து அவரால் அருகர்க்கு அழிவு தேடியவர்.

    நேசனார்: சிவனடியைத் தம் உள்ளத்தில் கொண்டவர்.  சிவனடியார்க்கு ஆடை கோவணம் நெய்து கொடுத்தவர்.  காம்பீலி நகரத்தவர்.  சாலிய மரபினர்.

    கோச்செங்கட் சோழர்: முன் பிறப்பில் சிலந்தியாய் இருந்தவர்.  அந்நிலையில் இறைவர்க்குப் பந்தர் வேய்ந்தவர்.  பின் சோழர் மரபில் பிறந்து அரசை மேற்கொண்டு ஆலயங்கள் கட்டுவித்தவர்.  திருச்சிற்றம்பலத்திற்குச் செம்பொன் அணிந்தவர்.  சிவலோகம் அடைந்தவர்.  தில்லையினைச் சூழ வேதம் வளர்த்தவர்.