த
திருவாரூர்:
பிறந்தார்; சிவகணத்துள்ளவர். இவர் சேவடிகளே செல்வநெறி அடையச் செழுநெறி ஆகும்.
முப்போதும் திருமேனி
தீண்டுவார்:
இவர்கள் ஆகம நெறியில்
வணங்கி அர்ச்சிப்பார். சிவனார் உலகில் அழியாச் செல்வத்தில் அமர்ந்தவர்.
முழுவீறு பூசிய
முனிவர்: உலக கலங்கினும் ஊழி திரியினும், உள்ளம் ஒருகாலும் விலகுதல் இல்லாதவர். திருவாரூர்
அமர்ந்த அரனடிக்கீழ் விளங்கும் வெண்ணீற்றைத் தம் திருமேனியில் அணிபவர்.
அப்பாலும் அடிச்சார்ந்தார்:
இறைவன் திருவடிகளில் சுந்தரர்க்குப்பின் அன்பு பூண்டு சார்பவர்கள். சிவனார் கணத்தைச்
சார்ந்தவர் நம் செழுந்தவர்.
பூசலார்:
திருநின்றவூரினர்.
இறைவனுக்கு ஒரு கோயில் எப்போது கட்டிமுடிப்பது என எண்ணியவர்; அவ்வெண்ணத்தை உறக்கம் இன்றி,
இரவும் பகலும் எண்ணி இறை அருள் பெற்றவர்.
மங்கையர்க்கரசியார்:
பாண்டிமாதேவியார். மானியார். தம் கணவனாரது வெப்புநோய் கண்டு, அது பொறாது சம்பந்தர்க்கு
அறிவித்து அவரால் அருகர்க்கு அழிவு தேடியவர்.
நேசனார்:
சிவனடியைத் தம் உள்ளத்தில் கொண்டவர். சிவனடியார்க்கு ஆடை கோவணம் நெய்து கொடுத்தவர்.
காம்பீலி நகரத்தவர். சாலிய மரபினர்.
கோச்செங்கட்
சோழர்:
முன் பிறப்பில் சிலந்தியாய் இருந்தவர். அந்நிலையில் இறைவர்க்குப் பந்தர் வேய்ந்தவர்.
பின் சோழர் மரபில் பிறந்து அரசை மேற்கொண்டு ஆலயங்கள் கட்டுவித்தவர். திருச்சிற்றம்பலத்திற்குச்
செம்பொன் அணிந்தவர். சிவலோகம் அடைந்தவர். தில்லையினைச் சூழ வேதம் வளர்த்தவர்.
|