பக்கம் எண் :

118

             காப்புப் பருவம்

        வாய்கலச மாகவழி பாடுசெய்யும்
            வேடன்மல ராகும் நயனம்
        காய்கணை யினால்இடந் தீசன்அடி
            கூடு காளத்தி மலையே

என்றும் பாடி, அவர் இறைவர்க்குத் தம் கண்ணை இடந்து அப்பியதையும், வாயில் நீர் கொணர்ந்து இறைவனை முழுக்காட்டியவேடர் என்பதையும் அறிவித்துள்ளனர்.

    நமிநந்தி அடிகளைக் குறிப்பிடும்போது,

    ஆவிதனில் அஞ்சொடுக்கி யங்கணன்என் றாதரிக்கும்
    நாவியல்சீர் நமிநந்தி அடிகள்

என்றருளியுள்ளனர்.

    கோச்செங்கட் சோழரைப் பாடும்போது, “சிலந்தி செங்கட் சோழன்” என்றும், “செம்பியர் செய்ய கண் இறை செய்த கோயில்” என்றும், பாடி, அவர் சோழர் மரபினர்; முன் பிறவியில் சிலந்தியாக இருந்தவர், கோயில் பல கட்டியவர் என்பனவற்றை அறிவித்துள்ளனர்.  மூவேந்தர் தலைவன் என்ற குறிப்பினை,

    “தென்னன் கோழிவஞ்சியும் ஓங்கம் செங்கோவி
    னான் மன்னன்” “சீரினால் அங்கொளிர்
    தென்னவன் செம்பியன் வில்லவன்”

என்றும் பாடியிருத்தலால் அறிக.

    முருகநாயனாரைப்பற்றிக் குறிப்பிடுகையில்,

        தொண்டர் தண்கயம் மூழ்கித்
            துணையலும் சாந்தமும் புகையும்
        கொண்டு கொண்டடி பரவிக்
            குறிப்பறியும் முருகன்

என்றும் பாடி அவர்காலையில் மூழ்கி மலர், சந்தனம், நறும் புகை இவற்றை இறைவர்க்கு நல்குவர் என்பதையும் குறிப்பறிந்து ஏவல் செய்வதையும் குறித்துள்ளனர்.