பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

145

    தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
   
வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித்து
   
ஆங்க யிற்கத்தி யாலஅரிந் தன்புடன்
   
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்

என்பதாலும், ஐயடிகள் காடவர்கோன்,

        திருமலியும் புகழ்விளங்கச்
           
சேண்நிலத்தில் எவ்வுயிரும்
       
பெருமையுடன் இனிதமரப்
           
பிறபுலங்கள் அடிப்படுத்துத்
       
தருமநெறி தழைத்தோங்கத்
           
தாரணிமேல் சைவமுடன்
       
அருமறையின் துறைவிளங்க
           
அரசளிக்கும் அந்நாளில்

என்பதாலும், இங்கு கூறப்பட்ட அடியார்கள்  “ வித்தக ஒழுக்கம் மிக்கார் “ என்றது மிக மிகப் பொருத்தமே ஆகும். 

    புகழ்ச்சோழர் வெட்டுண்ட சடைத்தலையுடன் தீயில் இறங்கினார்.  அதுபோது தேவர்கள்,

        புக்கபொழுது அலர்மாரி
           
புவிநிறையப் பொழிந்திழிய
       
மிக்கபெரு மங்கலதூ
           
ரியம்விசும்பின் முழக்கெடுப்பச்
       
செக்கர்நெடும் சடைமுடியார்
           
சிலம்பலம்பு சேவடியின்
       
அக்கருணைத் திருநிழற்கீழ்
           
ஆராமை அமர்ந்திருந்தார்

என்பதாலும், அதிபத்தர் அருந்தொண்டு காரணமாக  “ பொழிந்தனர் முகைப்பூ “  “ பஞ்சநாதமும் எழுந்தன “  என்று சேக்கிழாரால் கூறப்பட்டதாலும்,  “ விண்மருவுவார் பரவும் “ என்னும் அடை மொழி அடியார்கட்கு மிகப் பொருத்தமானதே.

    சேக்கிழார், பொய்யடிமை இல்லாத புலவர்களின்  “ அடி இணைகள் தலைமேல் கொண்டு “ என்றும், புகழ்ச்