New Page 1
சோழரின்
“ பதம் பணிந்து ஏத்தி “ என்றும், “ நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தி “ என்றும்,
“ அதிபத்தர் விளங்குதாள் வணங்கி “ என்றும், “ கலிக்கம்பர் மலர்ச் சேவடி வணங்கி “ என்றும்,
கலியநாயனார், “ கழல்வணங்கி “ என்றும், “ சத்தியார்தாள் பணிந்து “ என்றும், “ ஐயடிகள்
காடவனார் அடிஇணைத்தாமரை வணங்கி “ என்றும், அடியார்களை வணங்கியுள்ளார். ஆதலின் ஈண்டுத் திருபிள்ளை
அவர்களும், “ இருதயம் விடாதமர ஏத்தெடுப்பாம் என்று பாடிப்பரவினர்.
(7)
கறைக்கண்டன் கழலடியே
8. கறைக்கண்டன்
யாப்பின்ஐந் ததிகாரி மேல்ஓர்அதி
காரிமலை
மங்கைஒருபால்
கலந்திருக்
கவும்நிருவி காரிநிர்அ கங்காரி
காரியா காரிநாளும்
மறைக்கண்
டருஞ்சோதி ஓங்காரி அருள்ஏய
ஆங்காரி
முதல்அமர்ந்த
வன்கணம்
புல்லர்முன் சைவராம் ஐவரும்
மகிழ்ச்சிஉற
ஏத்தெடுப்பாம்
பிறைக்கண்டம்
இதுபகலில் முகில்நுழைவ ததிசயப்
பெற்றிஎன்
றாடுவார்கண்
பெட்பப்
பெருக்கெடுத் துவருபால் ஆற்றலை
பிறங்குவளை
வீசஅஃதத்
துறைக்கண்ட
நிமிர்கந்தி அம்சோலை தவழ்தரும்
தொண்டைவள
நாட்டுநாட்டும்
தொல்புகழ்க்
குன்றைவரு பாலறா வாயர்முன்
தோன்றலைமுன்
காக்கஎன்றே.
(அ. சொ.)
கண்டம்-துண்டு, முகில்-மேகம், பெற்றி-தன்மை, பெட்ப-விரும்ப, பெருக்கு-வெள்ளம், பிறங்கு-
|