க
காரிட்ட ஆணவக்
கருவறையில் அறிவற்ற
கண்ணிலாக் குழவியைப்போல்
கட்டுண்டிருந்த எமை
என்றும் கூறிப்போந்தார்.
உமாபதி சிவம்,
“ மோகமிக உயிர்கள் தொறும் உடனாய் நிற்கும் மூல ஆணவம் “ என்றும், “ செம்பினுள் களிம்பேய்ந்து
நித்த மூல மலமாய் அறிவு முழுதினையும் மறைக்கும் “ என்றும் கூறுதல் காண்க. தத்துவராய
சுவாமிகள், “ செம்பினில் காளிதம் போலப்பிணைத்துளவே “ என்று குறிப்பிடலையும் நோக்குக.
இதனால்தான், “ ஈண்டு மன்னிக்கழியா மடம் “ எனப்பட்டது. இதனையும். கழித்தவர் இடங்கழியார்
என்பதை இவர் வரலாற்றால் உணரலாம். தம் அரண்மனையிலிருந்து நெற்களைத் திருடிய சிவனடியாரைக்
காவலர் முன் கொண்டு சென்றபோது, இவர், “ இவர் அன்றோ பண்டாரம் எனக்கு “ என்று கூறினர்.
இவருக்கு ஆணவ மலம் மேலிட்டிருப்பின், இவர் இங்ஙனம் கூறுவாரோ? மேலும், மதம் முதலியன ஆணவக்
குறிகள் என்று சிவஞான முனிவரும், விகற்பம், குரோதம், மோகம், கொலை, மதம் முதலியன ஆணவ
மலக் குறிப்புகள் என்று உமாபதி சிவமும் கூறி இருத்தலின், இவை நாயனார்க்கு இருந்தனவோ? இல்லை.
பின் நாயனாரி என் செய்தார்?
நிறைஅறிந்த
உள்ளத்தால்
நெற்பண்டா
ரமும் அன்றிக்
குறைவில்நிதிப்
பண்டார
மானஎலாம்
கொள்ளைமுகந்
திறைவனடி
யார்கவர்ந்து
கொள்கஎன
எம்மருங்கும்
பறையறையப்
பண்ணுவித்தார்
படைத்தநிதிப்
பயன்கொள்வார்
ஆகவே, இவரை, “ மடங்கழி
இடங்கழி “ என்றது சாலப் பொருத்தமே.
|