அத
அதாவது இறந்தார்.
“ இதனை புரவலர் மன்றுள் ஆடும் பூங்கழல் சிந்தை செய்தார் “ என்கிறார்.
சிறுத்தொண்டர்
தம் அருமை மகனை அறுக்கின்றார். அந்த நிகழ்ச்சியில் இருவர் மனமும் பேர் உவகை எய்தி “ அரியவினை
செய்வார் “ என்று சேக்கிழார் கூறியுள்ளனர். இத் தொடர் அரிதலாகிய செயல் என்பதோடு, செயற்கரிய
செயல் என்று பொருள் தருதலையும் காண்க.
திருநீலகண்டர்
மாதர்களின் இச்சையுள் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிடுகையில் “ இளமை மீதுர இன்பத் துறையில் எளியர்
ஆனார் “ என்றும், காரைக்கால் அம்மையார் மணப்பருவம் உற்றதைக் குறிப்பிடுகையில்“ இல் இகவாப்பருவம் “ என்றும்
பாடினர். இன்னோரன்ன காரணங்களால் இவரது. வாய் தூய்மை உடையது என்று அறிதலின், திரு
பிள்ளை அவர்கள் தூவாய் மலர்ந்த என்று கூறியருளினர்.
திருவள்ளுவர்
“வாய்ச்சொல்“ என்று கூறியுள்ள தொடர்க்குப் பரிமேலழகர் பொருள் விளக்கம் கண்ட விடத்து,
“ வாய் என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு “ என்றனர். பரிதியார்
“ உபதேசத்தோடு கூடிய நல்லோர் சொல் ஆபத்துக் காலத்துக்கு வைத்த உடைமை போல் உதவும், என்றவாறு “
என்று விளக்கினார், “ துறந்தாரின் தூய்மை உடையார் “ என்ற தொடர்க்கு விளக்கம்
தரும்போது. தூய்மை என்பதற்கு மனம் மாசு இன்மை” என்ற விளக்கம் தந்தனர் காளிங்கர். அதாவது
“ மனம் வாக்குக் கருமம் என்னும் மூன்றினாலும் தூய்மை “ என்பது. அகம் தூய்மை என்னும் தொடர்க்குப்
பரிமேலழகர் கண்ட பொருள் “ மெய்யுணர்தல் “ என்பது, இவ்வாறு பேரறிஞர் கண்ட தூய்மைகளையுடையது
சேக்கிழார் வாக்கு ஆதலின் “தூவாய்“ என்றனர் என்று கூறினாலும் அமையும்.
வானவன் எனச்
சேக்கிழாரை ஈண்டே சுட்டியதன் கருத்துத் தேவேந்திரனுக்குக் கீழ்ப்பட்ட தேவர்கள் என்ற
|