பக்கம் எண் :

New Page 1

198

             காப்புப் பருவம்

குறித்த நாளில் ஈண்டிறோம்.  ஆகவே, வேறு ஒருநாளில் விழாவைக் கொள்ளவும் “ என்று கூறக் காடவர் கோன் அதிசயித்து, பூசலாரைக் காணப்புறப்பட்டனர்.  திருநின்றவூரை அடைந்தனர். பூசலார் கட்டிய கோவிலைத் தேடினர் ; கண்டிலர்.  ஆனால் அங்குள்ளாரை விசாரித்தார்.  அவர்கள்  “ அப்படி ஒரு கோவில் இல்லையே“ என்றனர்.  ஆனால், பூசலார் இருக்கும் இடத்திற்கு அரசரை அழைத்துச் சென்றனர், அவரைக் கண்டு மன்னர் வணங்கித் தொழுது  “ பெரியீர், நீங்கள் கட்டிய கோவில் எங்குள்ளது? அதில் நீர் இன்று சிவபெருமானைத் தாபிக்கப் போவதாகச் சிவபெருமானே என் கனவில் கூறினார்.  அக்காட்சியைக் கண்டு வணங்கிப் போற்றவே இங்கு வந்தேன். “ என்று பணிவாகக் கூறினார்.

    பூசலார் மருண்டார்.  இறைவரது திருவருளை வியந்தார்.  வியந்தவர் அரசனிடம்  “ என்னை, இறைவர் தம் பெருங் கருணை !  நான் கோவில் கட்ட எண்ணினேன்.  பொருள் போதுமானதாகக் கிடைக்கவில்லை.  மனத்தால் கட்டலாமா என்று சிந்தித்துக் கட்டினேன்.  கட்டிய முறை இது.  “ என்று கூறினார்.  அரசர் கேட்டு மகிழ்ந்து பூசலார் நாயனாரை தொழுது போயினார்.  பூசலாரும் மனத்தால் கோவில் கட்டியது போலவே இறைவரையும் மனத்திலேயே தாபித்து மகிழ்ந்து இறைவன் திருவடியுற்றார்.

    இந்நாயனார் மனத்தால் ஆலயங் கட்டிய முறையினைச் சேக்கிழார்  “ அன்பால், காதலில் கங்குல் போதும் கண் படாது எடுக்கலுற்றார் “  என்றனர்.   “ கங்குல்போதும் கண்படாது “  என்றதனால் ஊண் உறக்கம் இன்றிக் கோவிலைக் கட்டத் தொடங்கினார் என்பது பெறப்படுகிறது.  இது காரணம்பற்றி  “ ஆகாரம் முதலிய மறந்து இராப் பகல் முயன்று “ எனப்பட்டது.

    காடவர் கோன் பூசலார் கட்டிய கோவிலைக் காண வந்த போது, ஊரார் அம்மன்னனிடம் “ செப்பிய பூசல் கோயில் செய்த தொன்றில் “ என்று கூறினார்கள்.  இதனால் நாயனார் கட்டிய கோவில் யாவர் கண்ணுக்கும் புலப்படவில்லை என்