ஞ
ஞானத்தைக் கொடுப்பது
என்பதாம். நிருவாணம்- மோட்சம், முத்தி, முத்தி-மோட்சம், திருமுகம்-கடிதம், உய்த்திடப்
பெற்ற-கொண்டுவந்து கொடுக்கப் பெற்ற, நிலையது-இருப்பிடம், உமாபதிசிவம்-உமாபதி
சிவாசாரியார், அளவா-அளவிட முடியாத, மெய்ஞ்ஞானம்-தத்துவஞானம், அற்புதம்-வியக்கத்தக்க செயல்கள்,
நேயம்-அன்பு, விருப்பம், இம்மை-இப்பிறப்பில் அனுபவிக்கும் இன்பம், மறுமை-மறு பிறப்பில்
அனுபவிக்கும் இன்பம், மான்மியம்-பெருமை.
விளக்கம் :
தில்லைச் சிதம்பரத் தலத்துள் திருவம்பலம் பொன்னால் வேயப்பட்டது. இங்ஙனம் இது
பொன்னால் வேயப்பட்டது என்பதற்குரிய குறிப்புக்கள் பல சரித்திர வரலாறுகளாலும், தேவாரத் திருமுறைகளாலும்
அறியப்படுகின்றன. திருப்புறம்பயக் கல்வெட்டினால் விக்கிரம சோழவள நாட்டின் அரசரான குலோத்துங்கர்
சிதம்பரப் பேரம்பலம் பொன் வேய்ந்தமை புலனாகிறது. “ சேயவன் திருப்பேரம்பலம் செய்ய
தூய பொன்னணி சோழன் “ என்று சேக்கிழார் கூறியுள்ளதையும் காணக. அவரே மீண்டும்,
“ தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போர் ஏறு “ என்று பாடியுள்ளதையும் காண்க.
இதனால் சேக்கிழார் பெருமானது வரலாற்றுப் புலமையும் நன்கு புலனாகிறது. இவற்றை எல்லாம் உட்கொண்டே.
“ தூய ஒளி இருள்தபு பொன் மாளிகைத் தில்லை “ என்று கூறப்பட்டது.
பெத்தான்
சாம்பான் ஓர் ஆதித் திராவிடன். அவனுக்கு நிர்வாண தீட்சை செய்து முத்திப் பேறு அருளத் தில்லை
நடராஜப் பெருமான் ஒரு கடிதம் உமாபதி சிவாசாரியாருக்கு எழுதி அனுப்பினர். அத் திருமுகப்
பாசுரம்.
“ அடியார்க்
கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியார்க்கு எழுதிய
கைச்சீட்டு-படியின்மிசை
பெத்தான்சாம்
பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து
முத்தி கொடுக்க
முறை “
என்பது.
|