பக்கம் எண் :

New Page 1

258

             செங்கீரைப் பருவம்

        குழையொடு குழைஎதிர் மோதிக் காதணி
            குண்டலம் வெயில் வீசக்
        குமுத இதழ்க்கனி வாயமு தூறிய
            குறுநகை நிலவூர
        முழுவயி ரம்புய வலயமு முன்கை
            முதாரியும் ஒளிகால
        முத்தம் அரும்பி எனக்குறு வேர்வு
            முகத்தில் அரும்பியிடப்
        புழுதி அளைந்த பசுந்திரு மேனிப்
            பொங்கொளி பொங்கிஎழப்
        புண்டரி கங்கள் மலர்ந்த விழிக்கடை
            பொழிஅருள் கரைபுரள
        அழகு கனிந்து முதிர்ந்த இளங்கனி
            ஆடுக செங்கீரை
        ஆதி வயித்திய நாத புரிக்குகன்
            ஆடுக செங்கீரை

    சேக்கிழார் பெருமானார் அடியார்தம் அகத்தில் ஞான சூரியனாய் எழுந்தருளி, அவர்தம் அஞ்ஞான இருளை நீக்குகின்றமையின், அவரை ஈண்டு அன்பர் அகத்தமர் செஞ்சுர் என்றனர்.  இவர் நூல் இங்ஙனம் அகஇருளை நீக்கவல்லது என்பது,

இங்கிதன் நாமம் கூறின் இவ்வுல கத்து முன்னால்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புறஇருள் போக்கு கின்ற
செங்கதி ரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம்
                                            என்பாம்

என்ற பெரியபுராணப் பாட்டாலும் நன்கு தெரிய வருகின்றது.  அவரது புராணமே இங்ஙனம் அக இருளைப் போக்கவல்லதாயின், அவர் போக்கவல்ல ஞான சூரியர் என்பதைக் கூறவேண்டா அன்றே !

    உமாபதி சிவாசாரியார்  “ செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி “ என்றும், வடநூல் கடலும் தென்னூல் கடலும் நிலைகண்டுணர்ந்த சிவஞான முனிவர்,