க
காமிகம், சிந்தியம்,
சுப்ரம் என்பன. ருத்ர பேதத்தில் அடங்கியவை வீரம், வாதுளம், காலோத்தரம், மகுடம் என்பன ;
இவ்வொன்பது குருபரம்பரையில் பெற்றவை. இவ்வொன்பான் ஆகமங்களை இறைவன் இன்னின்னார்க்கு
உபதேசம் செய்தான் என்பதைத் திருமூலர்,
சிவமாம் பரத்தினில்
சத்தி, சதாசிவம்
உவமா மகேசர்,
உருத்திர தேவர்,
தவமால், பிரமீசர்
தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்
என்று அறிவித்தனர்.
ஆ-பாசம் க-பசு, ம-பதி
என்று பொருள் படுதலின், முப்பொருளை உணர்த்தும் நூல் ஆகமம் என்பதாயிற்று. அன்றி, ஆ-சிவஞானம்,
க-மோட்சம், ம-மலநாசம் என்றும் பொருள் படுதலின் ஆன்மாக்களின் மலத்தை நாசம் பண்ணி, சிவஞானத்தைத்
தோற்றுவித்து மோட்சத்தைக் கொடுத்தல் பற்றி ஆகமம் என்ற பெயரைப் பெற்றது எனினும் ஆம்.
ஆகமம் அறிவனூலும்
ஆகும். இதனை “ ஆகமம் என்பது மனுமுதலாகிய அறனொடு புணர்ந்த திறன் அறிநூலே “ என்ற தண்டி
அலங்கார நூற்பாவால் தெளிக.
இன்னோரன்ன ஆகமம்
பற்றிய பேர் அறிவினைச் சேக்கிழார் பெருமானார் பெற்றவர் ஆதலின், “ சகலாகம பண்டித “
என்றனர். வேதசாத் திரங்களைப் பயின்றவர் என்ற பொருளையும் இத் தொடர்க்குக் காண்க.
ஆகமம், வேதம் என்ற பொருளையும் உடையது.
சேக்கிழார்
பெருமானார் சகலாகம பண்டிதர் என்பதற்குரிய அகச்சான்றுகள் பல அவர் யாத்த பெரியபுராணத்தில்
பரந்து கிடக்கின்றன. தில்லைவாழ் அந்தணர்கள் புராணத்து
|