பக்கம் எண் :

ஆரண

280

       தாலப் பருவம்

 

 

    ஆரணியத் துலர்ந்தகோ மயத்தைக் கைக்கொண்
        டழகுற நுண்பொடி ஆக்கி ஆவின்
    நீரணிவித் தத்திரமந் திரத்தி னாலே
        நிசையமுறப் பிடித்தோம நெருப்பில் இட்டுச்
    சீரணியும் படிவெந்து கொண்ட செல்வத்
        திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்றுள்
    வாரணியும் முலையுமையாள் காண ஆடும்
        மாணிக்கக் கூத்தர்மொழி வாய்மை யாலே

    அடவிபடும் அங்கியினால் வெந்த நீறும்
        ஆன்நிலைகள் அனல்தொடக்க வெந்த நீறும்
    இடவகைகள் எரிகொளுவ வெந்த நீறும்
        இட்டிகைகள் சுட்டஎரி பட்ட நீறும்
    உடன்அன்றி வெவ்வேறே ஆவின் நீரால்
        உரைதிகழும் மந்திரங்கொண் டுண்டை ஆக்கி
    மடம்அதனில் பொலிந்திருந்த சிவாங்கி தன்னால்
        வெந்ததுமற் றுபகற்பம் மரபின் ஆகும்

என்ற சேக்கிழாரின் செம்மை சான்ற வாக்குகளைக் காண்க.  இவை அனைத்தும் ஆகம உணர்ச்சி பெற்றால் அன்றிப் பெறப்படாக் கருத்துக்கள் ஆகும்.

    சேக்கிழார் குடியினருள் திருமால் பெயரையும், தாங்கித் திருமால் பற்றும்  கொண்டவராக இருந்திருக்கக்கூடும் என்ற ஐயம் எழுதற்கான நிலையில் சிலர் இருந்திருக்கின்றனர்.  “ சயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராம தேவன் என்ற உத்தம சோழப் பல்லவராயன் “  என்றும், குன்றத்தூர்ச் சேக்கிழான் வரந்தரு பெருமாள் என்ற திருவூரகப்பெருமாள் என்றும், கல் வெட்டுக்களில் வரப்பெரும் பெயர்களைக் காணும்போது, இவ்வையத்தின் உண்மை புலனாகும்.  ராம என்பது சிவபெருமானுக்கே உரிய மந்திரம்.  ரா என்பது அரா என்னும் சொல்லின் எழுத்தும், ம என்பது உமா என்னும் சொல்லின் எழுத்தும்