New Page 1
சேர்ந்த மகா மந்திரமாகும்.
ஆகவே, இது தாரக மந்திரம் ஆயிற்று. இராமேச்சிரத்தில் உள்ள இறைவனுக்குரிய, இராமநாதன், ராமசாமி,
ராமலிங்கம் என்ற பெயர்களைக் காண்க. இராமனாகிய சாமி, இராமனாகிய நாதன், இராமனாகிய இலிங்கம்
என்பதே இத்தொடர்களின் பொருள். இறைவன் திருப் பெயரைத் தாங்கும் பேறு பெற்ற தசரத ராமனுக்குத்
தலைவர் என்ற பொருள் கோடலும் உண்டு. ஆகவே, சேக்கிழார் மரபு ராமன் என்னும் பெயர் தரித்ததும்,
சைவ மரபை ஒட்டியே ஆகும்.
இக்கருத்துக்கு அரண்
செய்யும் முறையில் கம்பர், இறைவனது திருநாமமாகிய ராமநாமத்தின் சிறப்பை,
நன்மையும்
செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும்
பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும்
மரணமும் இன்றித் தீருமே
இம்மையே
இராம என்றிரண் டெழுத்தினால்
ஓராயிரம்
மகப்புரி பயனை உய்க்குமே
சுராதிபர்
செல்வமும் புகழும் நல்குமே
வீராய்எனும்
பவங்களை வேர ருக்குமே
இராமஎன்
றொருமொழி இயம்பும் காலையே
மும்மைசால்
உலகுக்கெல்லாம்
மூலமந்
திரத்தை முற்றும்
தம்மையே
தமர்க்கு நல்கும்
தனிப்பெரும்
பதத்தைத் தானே
இம்மையே
எழுமை நோய்க்கும்
மருந்தினை
இராமன் என்னும்
செம்மைசேர்
நாமம்
என்றும் போற்றிப்
பாடினார்.
இவ்வாறு
சிவபெருமானது மந்திரமாகத் திகழும் காரணத்தினால்தான் ஸ்ரீலஸ்ரீ காமகோடிபீடம் சங்கராசாரிய
சுவாமிகள் எல்லோரையும் ராமநாமத்தை எழுதச் சொல்லுகிறார்.
|