New Page 1
பொங்கிய
இருளை ஏனைப்
புறஇருள்
போக்கு கின்ற
செங்கதி
ரவன்போல் நீக்கும்
திருத்தொண்டர்
புராணம் என்பாம்
என்று விளக்கிப் போந்தார்.
இதனையே “இன்பம்
அடைவதுவே பயன்” என்றனர். இன்பம் என்பது மெய்ஞ்ஞான இன்பமே ஆகும். சற்சங்கம் நிறைந்தபதி
குன்றத்தூர் ஆதலின் சங்கம். மரீஇ அமர் குன்றை” என்றனர். அங்குப் பல சங்கங்களை
இதுபோதும் நிறுவிப் பல சமய சமூக வளர்ச்சிக்கு, அங்குளார் பாடுபடுவதை நேரில் காணலாம்.
தொண்டர்புராணத்துள்
பற்பல அற்புதங்கள் நிறைந்துள்ளன. ஆன்கன்றும், அரசிளங்கன்றும் மந்திரியும் உயிர் பெற்று
எழுந்தனர். திருநீலகண்ட நாயனாரும் அவர்தம் மனைவியாரும் மேவியமூப்பு நீங்கி விழிப்புறும்
இளமை எய்தினர். அப்பர் சம்பந்தர், சுந்தரர் செய்த அற்புதங்கட்கு அளவில்லை. இங்ஙனம்
பல அற்புதங்களைத் தொண்டர் புராணம் கொண்டது ஆதலின், “ அற்புதம் மேவிய தொண்டர் புராணம்”
என்றனர். சேக்கிழார் மன்னவன் சீவக சிந்தாமணியில் கொண்டிருந்த பற்றினைப் போக்கித் தொண்டர்
புராணத்துள் அப்பற்றினைக் கொள்ளுமாறு செய்து, அவனைப் புறச் சமயத்தில் விழாதவாறு செய்து, சைவசமயத்தில்
ஈடுபாடுகொள்ளச் செய்த காரணத்தால் “கருணைக்கடலே” எனப்பட்டனர்.
(27)
|