பக்கம் எண் :

அண

 

       சப்பாணிப் பருவம்

383

அணிந்து, நகம்-விளங்கும், பரிவட்டம்-கடவுள்ஆடை, அம்பு-கங்கையாகிய நீர், சடையவர்-சடையுடைய சிவபெருமான்-ஐயம்-சந்தேகம், தெளியா-தெளிந்து, யாத்திடும்-தலையில் கட்டிடும் அள்ளுபு-அள்ளி, கொற்றச் சேவையர் தொண்டு புரிவதில் வெற்றிக் கொண்டவர், காவல்-தலைவரே.

    விளக்கம் :  இறைவன் தேவி காணத் தில்லையில் திருநடனம் புரிகின்றனர் என்ற உண்மையினைச் சேக்கிழார் பெருமானார்.  “மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம் பலத்தே ஆதியும் நடுவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாடும் நாதனார்” என்றருளியுள்ளார்.  குமரகுருபரர் இக்கருத்தை அழகுபட,

    “பொன்மன்றம் பொற்றா மரைஒக்கும் அம்மன்றில்
     செம்மல் திருமேனி தேன்ஒக்கும் அத்தேனை
     உண்டு களிக்கும் கரிவண்டை ஒக்குமே
     எம்பெரு மாட்டி விழி”

என்றனர்.

    இறைவன் இறைவி காணத் திருநடம் புரிதற்குரிய காரணம் இன்னது என்பதை அவரர் திதம்பர் மும்மணிக் கோவையில்,

    பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென
    நோயுண் மருந்து தாய்உண் டாங்கு
    மன்னுயிர்த் தொகுதிக் கின்அருள் கிடைப்ப
    வையம்ஈன் றளித்த தெய்வக் கற்பின்
    அருள்சூல் கொண்ட ஐயரித் தடங்கண்
    திருமாண் சாயல் திருந்திழை காணச்
    சிற்சபை பொலியத் திருநடம் புரியும்
    அற்புதக் கூத்த

என்று விளக்கியுள்ளனர்.