பக்கம் எண் :

 

418

       முத்தப் பருவம்

        கருக்கமில் கேன்வித் துகள்தீர்
            புலவர்முன் யான்மொழிந்த
        பருப்பொருள் தானும் விழுப்பொரு
            ளாம்பனி மாலிமயப்
        பொருப்பகம் சேர்ந்தபொல் லாக்கருங்
            காக்கையும் பொன்னி
        இருக்கும்என் றிவ்வா றுரைக்கும்
            அன்றோஇவ் இருநிலமே

என்பது அப்பாடல்.    இக்கருத்துக்களை உளம்கொண்டே   ஈண்டு,  “ கனகக் குன்றை” எனப்பட்டது.

    சேக்கிழார் பெருமானது திருவாய் கொவ்வைக் கனி போன்ற செம்மைத்தாதலின், “கனிவாய்” என்றும், அன்பு கனியும் வாய் எனவும் அறிதலின், “கனிவாய்” என்றும் திரு. பிள்ளை அவர்கள் கூறிய நயம் காண்க.

(42)

2.     எண்ணில் பொலிபல் புலவர்குழாத்
           தெய்தி நும்மோ டியாமொருவேம்
       என்று கூறி யெம்பெருமான்
           இருந்தாய் தருநன் னயமுடைத்தாய்
       மண்ணில் பொலிபு கயிலாய
           வரைக்கண் இவர்ந்தம் மாதேவன்
       வடிகா தகம்புக் உள்ளுருக்கும்
           வளமை யுடைத்தாய் வளத்தருவாழ்
       விண்ணில் பொலிவார் களும்வியப்ப
           வெள்என் பழத்திற் குயிர்அருளி
       வெங்க ராக்கொண் டதுமீட்கும்
           மிக்க விறலிற் றாய்எங்கள்
       கண்ணில் பொலிசெந் தமிழ்மணக்குங்
           கனிவாய் முத்தம் தருகவே
       கனகக் குன்றை அனகசெழுங்
           கனிவாய் முத்தம் தருகவே.