பக்கம் எண் :

New Page 1

 

        முத்தப் பருவம்

425

யுள்ள நால்வர் நான்மணி மாலைப் பாடல்களையும் ஈண்டு நினைவு கூர்வோமாக.

இடுகாட்டுள் மாதர் எலும்பில் புரள்மால்
சுடுகாட்டுள் ஆடுவான் சுட்டி-னொடுகாட்டும்
சம்பந்தா என்புநின்பால் தந்தாக்கிக் கொண்டிலன்என்
கும்பந்தாம் என்னுமுலைக் கொம்பு

உனற்க ரும்புகழ் மேவிய சுந்தரன் உம்பல்மீ திவரா
நினைப்ப ரும்கயி லாயம்அ டைந்தமைநின்று காண்குறவே
எனக்கு வந்துறு போமக வென்றழு கின்ற நாளலைபால்
தனித்து அருந்துபு மாலை உமிழ்ந்திடு தம்பி ரான்அலனே

என்பன அப்பாடல்கள்                                  

(43)

3.       சொல்லும் பொருளும் நனிசிறப்பச்
           சுருங்கச் சொல்லன் முதலாய
       தோட்டி யமைய அமங்கலமாஞ்
           சொற்கள் புணரா தறக்களைந்து
       வெல்லுந் தகைய முரண்காட்டி
           விலக்கு விலக விதிதழுவி
       விரும்பு மூல இலக்கியமே
           வேறா காதென் றுலகேத்த
       அல்லும் பகலும் அம்பலவர்
           அருடற் காய வரும்பணிசெய்
       தருள்பெற் றுய்ந்த அடியார்தம்
           அருமை பெருமை பாராட்டிக்
       கல்லுங் கரையக் கவிபாடுங்
           கனிவாய் முத்தந் தருகவே
       கனகக் குன்றை யனகசெழுங்
           கனிவாய் முத்தந் தருகவே.  

    (அ. சொ.) நனி-மிகவும், தோட்டி-அழகு, புணராது-சேராது, அற-முற்றிலும், முரண்-மாறுபாட்டினை, விலக்கு-