பக்கம் எண் :

 

436

       முத்தப் பருவம்

        மிண்டும் பொழில்பழை யாறை
            அமர்நீதி வெண்பொடியின்
        முண்டம் தரித்த பிராற்குநல்
            லூரின்முன் கோவணநேர்
        கொண்டிங் கருள்என்று தன்பெருஞ்
            செல்வமும் தன்னையும்தன்
        துண்ட மதிநுத லாளையும்
            ஈந்த தொழிலினனே

என்று குறிப்பிட்டுச் சென்றனர்.

    அதாவது கோவணம் இருந்த தராசுத்தட்டு நிறைகாணச் செல்வத்தையும், துணிமணிகளையும் இட்டதோடு இன்றித் தாமும் தம் மனைவியாரும் ஏறினர் என்பதாம்.  ஆனால், சேக்கிழார் பெருமானார் தராசுத் தட்டில் ஏறியவர்கள் மனைவியாரும் அமர் நீதியாரும் மட்டும் அல்லர்; அவர்களுடன் அவர்கள்தம் குழந்தையும் ஏறியிருந்தது என்பதை,

மனம கிழ்ந்தவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்
புனைம லர்க்குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனையு டன்கொடு தனித்துலை வலங்கொண்டு தகவால்
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து

என்றதோடு நில்லாது,

தொழுது பொற்றிஅத் துலைமிசை நின்றுநேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத்தம் முன்தொழு திருக்கும்
அழிவில் வான்பதம் கொடுத்தெழுந் தருளினார் ஐயர்

என்றும் பாடித் தம் கருத்தை வலியுறுத்தினார்.

    ஆகவே, சேக்கிழார் பெருமானார் சிற்சில சமயங்களில் முரண்களும் காட்ட வேண்டி இருந்தது.  ஆனால், அம்முரண்பாடான கருத்துக்களும் முற்றிலும் ஒப்புக்கொள்ளக்கூடியனவே அன்றி வேறல்ல.  இதனை அறிந்தே ஈண்டு “வெல்லும் தகைய முரண்காட்டி” என்று பாடப்பட்டது.  ஆயினும், ஈண்டுச் சிலர் நம்பியாண்டார் நம்பிகளும் தராசுத் தட்டில் குழந்தையும் ஏற்றப்பட்டது என்பதைக் கூறியே