பக்கம் எண் :

 

        முத்தப் பருவம்

445

    மலைத்துஅமுது உண்ணக் குழவியைத் தாயர்
    அலைத்துப்பால் பெய்து விடல்

என்று கூறுகிறது.

 மூரித்தேன் தாரி னாய்நீ முனியிலும் உறுதி நோக்கிப்
 பாரித்தேன் தரும நுண்நூல் வழக்கது வாதல் கண்டே

        அற்றமின் றுலகம் காக்கும்
            அருந்தொழில் புரிந்து நின்றான்
        கற்றவர் மொழிந்த வாறு
            கழிப்பது கடன தாகும்
        மற்றவர்க் குறுதி நோக்கி
            வருபழி வழிகள் தூரச்
        செற்றவர்ச் செகுக்கும் சூழ்ச்சி
            தெருண்டவர் கண்ட தன்றே

என்பன சூளாமணி.

        தம்முயிர்க் குறுதி எண்ணார்
            தலைமகன் வெகுண்ட போதும்
        வெம்மையைத் தாங்கி நீதி
            விடாதுநின்று உரைக்கும் மெய்யர்

என்பது கம்பராமாயணம்.

    மன்னவர் செவியழல் மடுத்த தாம்என
    நன்னெறி தருவதோர் நடுவு நீதியைச்
    சொன்னவர் அமைச்சர்கள் துணைவர் மேலையோர்
    ஒன்னலர் விழைந்தவா றுரைக்கின் றார்களே

    முற்றுற வருவதும் முதலும் அன்னதால்
    பெற்றிடு பயன்களும் பிறவும் தூக்கியே
    தெற்றென உணர்ந்துபின் பலவும் செய்வரால்
    குற்றம்ஒன் றவர்வயின் குறுக வல்லதோ

என்று கந்தபுராணமும்,

    செவிசுடச் சென்றாங்கு இடித்தறிவு மூட்டி
    வெகுளினும் வாய்வெரீஇப் பேரா கவுள்மதத்த