பக்கம் எண் :

10

476

       முத்தப் பருவம்

10.    நீளைநேர் மாதரொடு காளைநேர் மைந்தர்கள்
           நெருங்கிவிளை யாடு பாலி
       நெடுவெள்ளம் உவர்ஆழி யுள்புக அனார்குழீஇ
           நிறைமலர்கொய் பொழில்வா விவாய்
       வாளைதாய் எழவிடபம் வைகுதேத் தடைகீற
           மடைஉடைந் தென்ன வழியும்
       மதுவெள்ள மும்புகக் களமர்கள் கருப்பாலை
           வழிசாற்று வெள்ளமும் எழீஇ
       ஆளைமோ தும்படி புகக்கண்ட அறிஞர்ஏழ்
           ஆழியும் இதன்கண் ஆய
       ஆன்றநுண் அறிவினார் ஆராயின்என் றோதஅமை
           யாப்பெரு வளங்கு லாவும்
       பாளைவாய் கந்திமென் பால்தொண்டை நன்னாட
           பவளவாய் முத்த மருளே
       பரவுசீர் உலகெலாம் விரவுசே வையர்பிரான்
           பவளவாய் முத்த மருளே.

    [அ. சொ,]  நீளை-நீளாதேவி, நேர்-ஒப்பான, காளை-எருதுகள், பாலி-பாலாறு, உவர்-உப்புத் தன்மைவாய்ந்த, ஆழி-கடல், அனார்-அத்தகையார் (ஆண்கள் கூட்டமும் பெண்கள் கூட்டமும்,) குழீஇ-கூடி, பொழில்-சோலை, வாவிவாய்-குளத்தில், விடபம்-மரக்கொம்பு, வைகுதல்-தங்குதல், தேத்து அடை-தேன் கூட்டை, மது-தேன், களமர்கள்-உழவர்கள், கருப்பு-கரும்பு, ஏழ்-ஏழு, ஆன்ற-நிறைந்த, அமையா-நீங்காத, வாய்-பொருந்திய, குலாவும்-விளங்கும் கந்தி-பாக்குமரம்.

    விளக்கம் :   நீளாதேவி  அழகுக்கு  ஓர்  எடுத்துக்காட்டு;   திருமால்  தேவியருள் ஒருத்தி.  காளையரும் கன்னியரும் ஆற்றில் சலக் கிரீடைச் செய்வது இயல்பு.

    பொன்னுடைய வாசப் பொகுட்டு மலர்அலையத்
    தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த-மின்னுடைய