பக்கம் எண் :

New Page 1

48

             காப்புப் பருவம்

தொண்டை மேற்கொண்டவர்.  கோரோசனையும் கொடுத்து வந்தார்.  கோயிலுக்குள் செல்லாமல் வெளியில் இருந்த வண்ணமே.  இறைவரைக் கும்பிட்டு உருகுவார்.  திருப்புன்கூர் சென்று வெளியே இருந்து வணங்கும் போது இறைவர், தம் முன் உள்ள நந்தியை விலகுமாறு செய்தார்.  இவ்வாறு விலகி இருத்தலை இன்றும் காணலாம்.  அங்குக் குளம் வெட்டினார்.  இவருக்குச் சிதம்பரம் சென்று தரிசிக்க எண்ணம் எழுந்தது.  அவ்வெண்ணம் நீடித்தபோது,  “நாளைப் போவேன் நாளைப்போவேன்” என்று உறுதி கொண்டதால், திருநாளைப் போவார் எனப்பட்டனர்.  பிறகு தில்லை அடைந்தார்.  என்றாலும், “ உட்சென்று கூத்தப்பெருமானைக் கண்டு இன்புறவில்லையே.  நம் இழிபிறப்புத் தடையாக உள்ளதே” என்று உளம் குழைந்தார்.  கூத்தப்பெருமான் தில்லைவாழ் அந்தணர்கட்கு அவரை அழைத்துவரக் கட்டளை இட, அவர்களும் ஓமகுண்டம் அமைத்து அவரை அழைத்தனர்.  நந்தனார் கனவிலும் “ உன் இழிபிறவி ஒழிய ஒமகுண்டத்தில் மூழ்கித் தூய்மையுற்று வருக” என்றருளினார்.  நந்தனாரும் அந்தணர்கள் அமைத்த தீயில் மூழ்கி எழுந்தபோது முழுநீறு பூசிய முனிவராகத் திகழ்ந்தார்.  ஆலயம் சென்றனர்.  கூத்தப்பெருமானைக் கண்டு, அவர் திருவடியில் கலந்தனர்.

    திருக்குறிப்புத் தொண்டர் காஞ்சிபுரத்தில் வண்ணார் மரபில் உதித்தவர்.  சிவனடியார்கள் குறிப்பறிந்து தொண்டு புரிந்தவர்.  அவர்கள் ஆடையை வெளுத்துக் கொடுக்கும் தொண்டில் ஈடுபட்டவர்.  ஒரு நாள் சிவபெருமான் அடியார் வடிவில் வந்தனர்.  அவர் உடுத்திய ஆடை அழுக்கேறி இருந்தது.  அதனை வெளுத்துத் தருவதாக வேண்டிப் பெற்றார். வந்தவரும் நீராடி வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறிச்சென்றார்.  அவர் சென்றதும் பெருமழை பொழியத் தொடங்கியது.  நாயனார் ஆடையை வெளுத்தார்.  ஆனால், உலரவைக்க முடியவில்லை.  “ அடியார்க்குச் சொன்ன சொல்லைத் தவறிய நான், வாழ்ந்து பலனில்லை” என்று கல்லில் தம் தலையை மோதி மாய்த்துக் கொள்ள