6
6. வாரானைப் பருவம்
1. மண்டலம் மதிக்கும்மணி
யாத்தஉச் சிப்பூவும்
வண்பட்ட
முஞ்சுட்டியும்
வாகுவல யமும்மதா
ணியும்உதய வெயில்செய
மகத்துவத் தொண்டர்சீர்த்தி
விண்டலம் மதிக்கஎழு
செய்யவாய்ப் புகழெழுதல்
விழையஎழு
குறுமுறுவலும்
வெண்ணீறு முத்தமா
லிகையும்இள நிலவுசெய
வெய்யேம்
மனத்தடத்துந்
தண்டல்அமை யாதலர்
சரோருகப் பதமேல்
சதங்கையும்
தண்டையும்ஒளி
தவாஞெகிழி யும்படீஇக்
கலகல இரட்டஉயர்
சைவநிலை எங்கும்நிகழக்
கொண்டல்அமர்
கொடைகொண்ட கரதலச் சேவையார்
குலசிகா மணிவருகவே
கொன்றைச் சடாடவியர்
மன்றைப் பராவிஎழு
குன்றைப்
பிரான்வருகவே
[அ. சொ.]
மண்டலம்-உலகம், மணி-இரத்தினக் கற்களால், யாத்த- பதித்த, உச்சிப்பூ - குழந்தைகட்கு அணியும்
ஒருவகை அணிகலன், இஃது உச்சியில் அணியப்படுவது, வண்பட்டம்-வளமான நெற்றிப்பட்டம் என்னும்
ஆபரணம், சுட்டி-நெற்றிச் சுட்டி என்னும் அணிகலம். வாகுவலயம் - தோள்வளை என்னும் நகை, மதாணி-மார்பில்
அணியும் ஒருவகை கலம், வெயில்-ஒளி, சீர்த்தி-மிகுந்த புகழை விண்தலம்-தேவலோகம், விழைய-ஒப்ப,
குறுமுறுவல்-சிறுநகை, மாலிகை-மாலை, வெய்யேம் - கொடுமை மிக்கவர்களாகிய எமது, தடம்-குளம்
|