பக்கம் எண் :

வன

 

       அம்புலிப் பருவம்

591

        வன்தொண்டர் பாதம் தொழுதான
            சிறப்பு வாய்ப்ப
        என்றும்நில வும்சிவ லோகத்தில்
            இன்பம் உற்றார்

என்றும் பாடித் தாம் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கை விரித்துப் பாடும் வாக்கியாகவும் துளங்கினர், நம் பேரறிஞர் சேக்கிழார் பெருமானார்.  ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு துறையில் புலமை மிக்கிருக்க, நம்புலவர் பெருமானார் எல்லாத் துறையிலும் புலமை மிக்கிருந்தமையின் “அறிவர் கழகம் பரவு குன்றை நகர் ஆளி” என்றது எல்லாப் படியாலும் மிக மிகப் பொருத்தம் அன்றோ?

(68)

8.    பெருநாவ லோஎனும் முழக்கறா மென்பால்’
           பிறங்குபயிர் கொடிசெடிஎலாம்
       பேணும் கருக்கொள்ள நீஉப கரித்தல்உள்
           பேணா திருந்தான்அலன்
       திருநாவ லூரர்சீ காழியார் கூன்அறத்
           திருவாய் மலர்ந்ததொப்பச்
       செயிர்கொள்நின் கூன்ஒழிப் பான்வாய் மலர்ந்துகூன்
           செய்யுளினும் உறவைத்திலான்
       ஒருநாவ லொடுபெயர் பெறும்பொலத் தினும்அருமை
           உறநவில் புராணத்தினோர்
       ஒப்பிலா எங்கள்பெரு மான்நட்பு மதிநிற்
           குயிர்க்குறுதி செய்வதாகும்
       அருநாவ லோர்பரவு குன்றைநகர் ஆளியுடன்
           அம்புலீ ஆடவாவே
       அருளுருத் தேசுபொலி அருண்மொழித் தேவனுடன்
           அம்புலீ ஆடவாவே

    [அ. சொ,]  நாவலோஎன-நாவலோ என்று உழவர் செய்யும் ஓசை.  மென்பால்-மருத நிலம், உபகரித்தல்-