பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

61

நிகழ்ச்சியும் நிக்ழ்ந்த காரணத்தினால் தான்  “ கல் மிதந்தும்‘ என்று சிறப்பு உம்மை கொடுக்கப்பட்டது.

    இறைவர் திருக் கண்டம் திருநீல கண்டம்.  அது கருநி முடையது.  அது கருணைக்கு அறிகுறி.  இதனை அப்பர்,

        பருவரை ஒன்று சுற்றி அரவங்கை விட்ட
            இமையோர் இரிந்து பயமாய்த்
        திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு
            சுடுவான் எழுந்த விசைபோய்ப்
        பெருகிடம் மற்றிதற்கோர் பிதிகாரம் ஒன்றை
            அருளாய் பிரானே எனலும்
        அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட
            அண்டர் அண்டர் அரசே

என்று அறிவித்துள்ளது கொண்டு தெளியலாம்.

        புவனங்கள் உய்ய ஐயர் பொங்குநஞ்
            சுண்ண யாம்செய்
        தவம்நின்று தடுத்த தென்னத் தகைந்துதான்
            தரித்த தென்று
        சிவனெந்தை கண்டம் தன்னைத்
            திருநீல கண்டம் என்பார்

என்றும்

    “அடியாராம் இமையவர்தம் கூட்டம் உய்ய
        அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே “

என்றும் சேக்கிழாரும்

    மாயிரு ஞாலத்து மன்னுயிர்கள்
        கண்களிப்ப மன்றுள் ஆடும்
    நாயகன் கண்டம் கறத்தன்றே
        பொன்உலகை நல்கிற் றம்மா
    நாயகன் கண்டம் கறாதேல்
        அந்நாட் டமரர்
    சேயிழை மாதருக்குச் செங்கைகளும் கொங்கைகளும்
        சிவக்கும் அன்றே

என்றும்,