பக்கம் எண் :

New Page 1

 

       சிற்றில் பருவம்

617

        வையம் அனைத்தும் ஈன்றெடுத்தும்
            வையது முதிரா மடப்பாவை
        மடியில் இருத்தி முலைஊட்டி
            வதனத் தணைக்கில் உன்கழல்கால்
        செய்ய சிறுதூள் செறியாதோ
            சிறியேம் சிற்றில் சிதையேலே
        திரைமுத் தெறியும் திருச்செந்தூர்ச்
            செல்வர் சிற்றில் சிதையேலே

என்று பாடிய பாடலையும் பன்முறை படிக்க.

    பெரியோர்கள் திருவடிகளை வந்தித்து மலரிட்டு அர்ச்சிப்பது சைவ மரபு.  இதனைப் பெரிய புராணத்துள், பரக்கக் காணலாம்.  இளையான் குடிமாற நாயனார் புராணத்துள் அடியாரை அர்ச்சித்தவிதம் கூறப்பட்டிருத்தல் காண்க.  “கொண்டு வந்து மனைப்புகுந்து குவாவு பாதம் விளைக்கியே, மண்டு காதலின் ஆசனத்திடை வைத்தருச்சனை செய்த பின்,” என்று கூறப்பட்டிருத்தல் கொண்டு, பெரியோர்கள் திருவடிகளை மலரால் அர்ச்சித்த முறையைக் காண்க.  அதுவே, சேக்கிழார் திருவடி மலர் தோய்தற்குரியது என்பதும், அது மணல் தோய்தற்குரியது அன்று என்பதும் கூறப்பட்டன.

    மாதர்களின் பற்கள் வெண்ணிறமானவை.  அவ் வெண்ணிறத்திற்கு உவமையாக ஈண்டு மயில் இறகின் அடிப்பகுதி கூறப்பட்டது.  “முருந்தேர் இளநகை” என்று சிலம்பு செப்புதல் காண்க.   மடமாதர்  என்றது  இளம்  பருவப்  பெண்களையாகும்.   அறிவில்லா  மாதர் என்பதன்று.

    சோலைகளில் மாதர்கள் வந்து சேர்வர் ஆதலின் ;  “மடமாதர் முயங்கும் பொழில்” என்றனர்.  மாதர்கள் சோலையை விரும்பிப் புக்கதைப் பரஞ்சோதியார்,

        கூந்தல் பிடியும் பரியும் ஊர்வார்
            கொழுநர் தடம்தோள்
        ஏந்தச் சயமா தென்னத் தழுவா
            இழிந்து பொழில்வாய்ப்