| 
நம
 
      
நம்பா நினக்கோலம் 
முறையோ எனக்கால 
        நஞ்சுண்டு பித்துண்டு 
நம்தேவர் என்பார் 
    தம்பாவை யார்க்கன்று 
காதோலை பாலித்த 
        தயவாளர் “ 
என்றும் குமரகுருபர 
சுவாமிகளும், கருநின்ற கண்டத்தின் அறிகுறியைப் போற்றிப் பரவியுள்ளனர்.  புறநானூறாகிய சங்க 
இலக்கியமும் திருநீல கண்டத்தின் மாண்பை, 
    “ கறைமிட றணியலும் 
அணிந்தன்று அக்கறை 
    மறைநவில் அந்தணர் 
நுவலவும் படுமே “ 
என்று போற்றுகிறது. இன்னோரன்ன 
குறிப்புக்களைக் கொண்டு திகழ்வது  “ கருநின்ற கண்டர் அருள் “ என்னும் தொடர்.  இறைவர் அப்பர் 
பெருமானார்க்கு நஞ்சு அமுதாக்குவித்தும், கொல்லவந்த யானையைக் குனியச் செய்தும் புரிந்த 
அருள்கள் பலவாதலின்,  “  அருள் வெளி செய் “  என அப்பருக்கு அடை கொடுக்கப்பட்டது. 
    அல்லது, அப்பூதி 
அடிகளாரின் மூத்த திருநாவுக்கரசு பாம்பு கடித்து இறந்தபோது, பதிகம் பாடி உயிர்ப்பித்த அருளை நினைந்து 
இவ்வாறு சிறப்பிக்கப்பட்டது எனினும் ஆம். அப்பூதியார் திருமகனை எழுப்பியஅருள் நிலையினைச் சேக்கிழார். 
    நாவினுக்கரசர் 
கேளா நன்றுநீர் 
        புரிந்த வண்ணம் 
    யாவர்இத் தன்மை 
செய்வார் என்றுமுன் 
        எழுந்து சென்றே 
    ஆவீதீர் சவத்தை 
நோக்கி அண்ணலார்  
        அருளும் வண்ணம் 
    பாவிசைப் பதிகம் 
பாடிப் பணிவிடம் 
        பாற்று வித்தார் “  
என்று பாடியுள்ளார்.  
அல்லது, 
 |