New Page 1
தெம்முனை சாயச்
சமர்விளை யாடிச்
செங்கள
வேள்விசெயும்
திறள்முர செனஇமை
யவர்விழ வயரச்
செழுநகர் வீதிதொறும்
மும்முர சமும்அதிர்
காவிரி நாடன்
முழுக்குக சிறுபறையே
முத்தமிழ் பயில்பரு
திப்பதி முருகன்
முழக்குக சிறுபறையே
என்று பாடி இருத்தலைக்
காண்க.
குணில் என்பது சிறுகுறுந்தடி.
இதனால் பறை அடிக்கப்படும். குணில், அடிக்கும் கருவியாகப் பயன் பட்டதைச் சிலப்பதிகாரம்,
கன்று குணிலாக் கனிஉகுத்த
மாஅயவன்
இன்றுநம் மானுள்
வருமேல் அவன்வாயில்
கொன்றையம் தீங்குழல்
கேளாமோ தோழீ
என்று அறிவித்தல் காண்க.
துண்டீர நாடு என்பது
தொண்டை நன்னாடு. துண்டீரன் என்பவனால் ஆளப்பட்டமையின் இது துண்டீர நாடு என்ற பெயர் பெற்றது.
பின்னர் தண்டகன் என்பவனால் ஆளப்பட்டமையின் தண்டகன் நாடாயிற்று. அதன்பின் ஆதொண்டனால்
ஆளப்பட்டமையின் தொண்ட நாடாயிற்று. இந்த முறை வைப்பினை இராமலிங்க அடிகளார்,
‘அல்லதூஉம் சேரன்மண்டலம்-சேரமண்டலம்,
சோழன் மண்டலம்-சோழ மண்டலம் என்பன போல், இம்மண்டலத்திற்கு, முன்னர் துண்டீரனால் ஆளப்பட்டமையின்
துண்டீரன் மண்டலம், துண்டீரமண்டலம், துண்டீரன்புரம், துண்டீர புரம் என்றும், பின்னர்த் தண்டகனால்
ஆளப்பட்டமையின் தண்டகன் நாடு, தண்டக நாடு, தண்டகன் புரம் தண்டகபுரம் என்று பெயர் வழங்கின ;
அவைபோல், அதன் பின்னர் ஆதொண்டனால் ஆளப்பட்டமையால் ஆதொண்டன் மண்டலம், ஆதொண்ட மண்டலம்
தொண்டன் மண்டலம் தொண்ட மண்டலம் என்றே மரபு வழுவாமை
|