New Page 1
“பொன்மன்றம்
பொற்றா மரைஒக்கும் அம்மன்றில்
செம்மல் திருமேனி
தேன்ஒக்கும் அத்தேனை
உண்டு களிக்கும்
களிவண்டை ஒக்குமே
எம்பெரு மாட்டி
விழி”
என்று குமரகுருபரரும் கூறியதைக்
காண்க.
இங்ஙனம் இறைவி ஏன்
இறைவன் திருநடனத்தினைத் தன் கண்கொண்டு காண்கின்றனள் என்பதற்குரிய காரணத்தைக் குமரகுருபரர்,
“மன்னுயிர்த் தொகுதிக்கு
இன்அருள் கிடைப்ப
வையம்ஈன் றளித்த
தெய்வக் கற்பின்
அருள்சூல் கொண்ட
ஐயரித் தடங்கண்
உருமாண சாயல் திருந்திழை
காணச்
சிற்சபை பொலியத்
திருநடம் புரியும்”
என்று சிதம்பர மும்மணிக்
கோவையில் கூறுதல் காண்க.
தில்லை அம்பலம்
பற்பல அரசர் காலத்தில் பொன்னால் அமைக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை ஆகும். ஆதித்த
சோழன் மகன் பராந்தகன் திருச்சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன். விக்ரமசோழன் மகன்
இரண்டாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன் வேய்ந்தான். தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டைப்
பொன் வேய்ந்தவனும் விஜயாலயன் ஆதித்தன். விக்ரமசோழன், தில்லைச் சிற்றம்பலம் சூழ்ந்த
சுற்றுமாளிகை, கோபுரம், வாயில் இவற்றைப் பொன் வேய்ந்தான். இவ்வாறு பொன் வேய்ந்து
சிவபெருமானிடத்தில் இடையறா அன்பு சோழப் பேரரசர்களிடம் இருந்தமை கண்டுதான், Vincent
Smith என்பவர், “The Chola kings apparently with out exception were votaries of
the God Siva’ என்று புகழ்ந்து எழுதியுள்ளனர்.
ஆகவே, அம்பலம்
பாங்குபுனை செம்பொன் அம்பலம் ஆயிற்று. இறைவன் ஒருவனே பரஞ்சோதி என்பதைத் தாயுமானவர்,
“சுத்த நிற்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுகவாரியே” என்றனர். ஆகவே, ஈண்டும் பரஞ்
|