பக்கம் எண் :

அதன

 

       சிறுபறைப் பருவம்

683

அதனால் அபிசார யாக செய்தனர்.  அதிலிருந்து பாம்புகள், பூதங்கள், புலி, யானை முயல்கள், முதலியனவற்றை எழுப்பி, இறைவனை அழிக்க ஏவினர்.  அவற்றை முறையே ஆபரணங்களாகவும், கணங்களாகவும், கொண்டு மானைக் கையில் ஏந்தியும், புலி, யானை இவற்றைக் கொன்று அவற்றின் தோலை உடுத்தியும், முயலனைக் காலில் மிதித்தும் தமது பேராற்றலுடைமையை விளக்கினர்.

    கஜமுகா  சூரனை  முனிவர்  வேண்டு  கோட்கிணங்கிக்  கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டனர் என்ற வரலாறும் உண்டு.  இதனை, 

    ஒருப தத்தினைக் கவான்உற திருக்கரத் துகிரால்
    வெரிந்இ டைப்பிளந் தீர்இரு தாள்புடை மேவக்
    குருதி கக்கியே ஓலிட அவணர்தம் குலத்துக்
    கரிஉ ரித்தினன் கண்டுநின் றம்மையும் கலங்க

    ஐயன் மிக்கதன் கதிரினைக் குருதிநீர் அறாத
    மையல் யானைவன் தோலைமேற் கொண்டனன்
                                        மறைந்தான்

எனக் கந்த புராணம் கூறுதல் காண்க.

    சேக்கிழார், மேகம் மலைமீது தவழ்ந்திருக்கும் காட்சியினை வெகு அழகுற,

அளிக்குலங்கள் சுளித்தகல அரவிந்தம் முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல் லியில்கோத்த பான்மைஎனத்
துளித்தலை மெல்அறுகுபனி தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனையகுன்றுகளும்

என்று வர்ணித்துள்ளதைக் காண்க.

    “செல்” என்னும் சொல் மேகத்தையும் உணர்த்தும் செல்க என்னும் பொருளையும் தரும்.  இந்த இருபொருள்களும் பொருந்தச் சிலேடைப் பொருளில் மாயூரம் வேத நாயகம்பிள்ளை அவர்கள்.