பக்கம் எண் :

சுரமகள

692

             சிறுபறைப் பருவம்

        சுரமகளிர் கற்பகப்பூஞ்
            சோலைகளி்ன் மருங்கிருந்து
        கரமலரின் அமுதூட்டும்
            கனிவாய்மென் கிள்ளையுடன்
        விரவுநறும் குழல்அலைய
            விமானங்கள் விரைந்தேறிப்
        பரவியஏழ் இசைஅமுதம்
            செவிமடுத்துப் பருகினார்

        நலிவாரும் மெலிவாரும்
            உணர்ஒன்றாய் நயத்தலினால்
        மலிவாய்வெள் எயிற்றரவம்
            மயில்மீது மருண்டுவிழும்
        சலியாத நிலைஅரியும்
            தடம்கரியும் உடன்சாரும்
        புலிவாயின் மருங்கணையும்
            புல்வாய புல்வாயும்

        மருவியகால் விசைத்தலையா
            மரங்கள்மலர்ச் சினைசலியா
        கருவரைவீழ் அருவிகளும்
            கான்யாரும் கலித்தோடா
        பெருமுகிலின் குலங்கள்புடை
            பெயர்ஒழியப் புனல்சோரா
        இருவிசும்பின் இடைமுழங்கா
            எழுகடலும் இடைதுளும்பா

இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் இசைமயமாய்
மெய்வாழும் புலன்கரணம் மேவியஒன் றாயினவால்
மொய்வாச நறுங்கொன்றை முடிச்சடையார்
                                அடித்தொண்டர்
செவ்வாயின் மிசைவைத்த திருக்குழல்வா சனைஉருக்க

என்ற பாடல்களின் பொருளைக் காண்க.

    இவ்வாறே கண்ணன் குழல் ஊதியபோது தேவமாதர்களும், வித்தியாதரர்களும் மகிழ்ந்ததையும், அஃறிணைப்