பக்கம் எண் :

694

             சிறுபறைப் பருவம்

ஓகையுடன் சிறகுவிரித் துற்று நோக்கி
    உருகிஇரு கண்இமையா திருந்து தூய
நாகமிசை நடித்தருள்வோன் வேயின் ஊது
    நாகஇசை இருசெவிஓர்ப் புற்று நைந்த

கருமுகில் அஞ்சன நீலம் காயாம் பூவின்
    கவின்நிகராம் உருஉடைய கண்ணன் வாயில்
மருவுகுழல் ஊதஎழு நாத கீதம்
    மகோததியின் அமிர்தெனவே செவியின் வாய்ப்ப
அரியநறு மலரினுறு வேரி தன்னை
    அருந்துதல்விட் டெய்தி அளி பாடா தாடா
திருசிறகு விரித்துயர்வான் நசையா தேகா
    தெழுதியசித் திரம்போல இருந்த தன்றே

நாகரிக னானவள்ளல் ஊது கின்ற
    நற்குழலில் எழுநாத கீதம் கேட்டே
சூகரம்பஞ் சானனம் சார்த்தூலாங் கைமாத்
    துலங்கியவா விகம்மயிடம் எண்கு சீறி
மோகரத்தின் நெய்தாளி குருளை யோடு
    முடுகசின மொழிந்துகண்கள் இமையா தாகிச்
சாகரமாயச் செவிநெறித்தே உருகி நிற்பச்
    சற்பங்கள் படம்விரித் டாமல் நின்ற

காதினில்குண் டலம்இலங்க நெற்றி மீதில்
    கத்தூரித் திலகஒளி கவினைக் காட்டச்
சீதரன்தன் வாயின்இசை ஏழும் நாணச்
    சிறந்தகுழல் ஊதஎழும் நாதம் தன்னால்
பாதவங்கள் மதுச்சொரிய மலர்கள் வீழப்
    பரந்துகனி உதிர்ந்திடவே பணிவார் போலப்
பூதலத்தில் பரமன்நின்ற திரையை நோக்கிப்
    பொலிந்த தாமரைக்கை வளைந்த மாதோ

கானில்எழு நிலவெறிப்பத் தண்கால் வீசக்
    காவின்உற மலர்வாசம் கமழக் கேழின்
நானவெறி உறுமேனி திகழ நின்ற
    நாரணனன்ஊ தும்வேயின் நாதம் கேட்ட