இ
இறைவனது திருவருட் பெற்றவர்களின் அருட் கவிகளின் பொருள்களை எல்லாம் தம் நூலில் புகுத்திப்
பாடல்களைப் பாடி இருத்தலினாலும், இவரது பாடல் அருட்கவிதானே !
“ஐந்து பேர் அறிவும்”
என்று தொடங்கும் இவரது பாடல், குமர குருபர சுவாமிகட்கு ஞானசாரியானது திருவருள் உண்டாகத்துணையாய்
நின்றது என்பதை உணரும்போது, இவரது கவிகள் அருட்கவிகள்தாமே ! வேறு என்ன வேண்டும் இவர்
அருட்கவி பாடிய புலவர் என்பதற்கு.?
அனபாயச் சோழன்
கடலில் பெரியது எது? மலையில் பெரியது எது ! உலகில் பெரியது எது? என்றுதன் அவைக்களப் புலவர்களைக்
கேட்டபோது, அங்கிருந்த புலவர்கள் எவரும் அவ்வினாக்களுக்கு விடை தர இயலாது விழித்த போது,
நமது சேக்கிழார் பெருமான் அல்லரோ !
“பயன்தூக்கார் செய்த
உதவி நயன்தூக்கின்
நன்மை கடலில் பெரிது”
என்றும்,
“நிலையில் திரியாது
அடங்கியான் தோற்றம்”
மலையின் மாணப் பெரிது”
என்றும்,
“காலத்தி னால்செய்த
நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப்
பெரிது”
என்றும்,
விடை இறுத்தனர் !
ஆகவே, இவர் பெரும் புலவர் தாமே ! எனவே, திரு பிள்ளை அவர்கள் சேக்கிழாரைப் புலவன்” என்றனர்.
(87)
|