| 
நல
 
நல்க-எடுத்துக் 
கொடுக்க, ஞெகிழியின் ஒலி-சிலம்பின் ஒலி, பொற்ப-அழகுற, முங்கு-மூழ்கும், அஞ்செவி என்பது 
அகம்செவி என்று பிரிக்கப்படும் போதுதான் உள்செவி என்று பொருள்படும்.  “அஞ்சிறைதும்பி”  
என்ற தொடரையும் காண்க. “அகம் முனர் செவிவரின் இடையனகெடும்” என்பது விதி. 
     விளக்கம் :  இறைவராம் 
நடராசப் பெருமான், மன்னன் முதல் மற்றைய யாவரும் கேட்க, “நாம் முதல் எடுத்துக் கொடுக்கச் சேக்கிழார் 
அடியவர் வரலாற்றைப் பாடியுள்ளனர்.  “அதனைக் கேட்பீராக” என்று அசரீரியாகச் சொன்னார் என்பது 
தொண்டர் புராண வரலாறு கூறும் உண்மை.  இதனை அப்புராணத்துள், 
    சேக்கிழான் நமதுதொண்டர் 
சீர்பரவ 
        நாம்மகிழ்ந் துலகம் 
என்றுநம் 
    வாக்கி னால்அடி எடுத்து ரைத்திட 
        வரைந்து நூல்செய்து 
முடித்தனன் 
    காக்கும் வேல்வளவ 
நீஇதைக் கடிது 
        கேள்எனக் ககன 
வெளியிலே 
    ஊக்க மானதிரு 
வாக்கெ ழுந்தது 
        திருச்சி லம்பொலியும் 
உடன்எழ 
என்றுவரும் பாடலால் அறியலாம்.  
இக்குறிப்பே இப்பாட்டில் முதல் பகுதியில் காணப்படுவது.  சேக்கிழார் அடியார் வரலாற்றை முழுக்கப் 
பாடினார் என்பதைக் காப்புப் பருவத்தில் நன்கு விளக்கப் பட்டுள்ளது.  ஆண்டுக் காண்க. 
    இறைவனே நமது சேக்கிழாரை, 
“எங்கும் அளாம்புகழ் இச்சேவையர்கோன்” என்று புகழ்ந்து கூறும் பெருமையினைப் பெற்றனர் என்றால், 
அவர்தம் பெருமையினை எங்ஙனம் எடுத்து இயம்புவது? இறைவன் திருவாக்குச் சிலம்பொலியுடன் கேட்டது 
என்பது புராணத்தும், பிள்ளைத் தமிழினுள்ளும் இருத்தலை ஓர்க.  இதனால் கருத்து ஒற்றுமை கவினுறத் 
தெரிகிறது.  “வெருளில் மெய்ம்மொழி வான் 
 |