பக்கம் எண் :

2

 

       சிறுதேர்ப் பருவம்

727

2.     முறியும்மல ரும்பொருவு திருமேனி உமைஅம்மை
           மூவுல குயத் தழுவுபு
       மூரிப் புனல்கம்பை எம்பிரான் திருமேனி
           முற்றும் குழைத்த ஞான்றில்
       அறியும்வகை அறம்எலாம் பொலியஇரு நாழிநெல்
           அளந்தப் பிரான் கொடுக்க
       அனையமா தேவிஏற் றேற்றகை உயிர்த்தமக
           ளால்உயிர்த் தோர்க ளேநல்
       நெறியும்நல னும்பெருக உளர்எனல் குறித்தவர்கை
           நீட்டப் பணிந்து வாங்கி
       நீடும் கொழுக்கொடுதம் மனைஉதவி யால்நனி
           நிரம்பப் பெருக்கு குடியுள்
       செறியும்ஒரு குடியாய சேவையர் குலாதிபன்
           சிறுதேர் உருட்டி யருளே
       சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினோன்
           சிறுதேர் உருட்டி யருளே.

    [அ.சொ.]]: முறி-தளிர், பொருவும்-நிகர்க்கும், திரு மேனி-அழகிய சரீரம், உய-உயிர் பிழைக்க, மூவுலகு-சுவர்க்க, மத்திம பாதாளங்களாகிய மூவுலகங்களும், தழுவுபு-தழுவி, மூரி-வலிமையுடைய, கம்பை-கம்பாநதி, எம்பிரான்-எம் இறைவனாகிய ஏகாம்பர நாதர், குழைத்த-இளகும்படி செய்த, ஞான்றில்-பொழுதில், அறம்-தருமம், பொலிய-விளங்க, நாழி-படி அனைய-அத்தகைய சிறப்புடைய, மாதேவி-பெருந்தேவி யாகிய உமாதேவி, உயிர்த்த-உண்டாக்கிய, மகள் - கங்காதேவி, உயிர்த்தோர்கள்-பெற்றவர்களாகிய வேளாளர்கள், தோன்றியவர்கள் எனினும், ஆம் நெறி-மார்க்கம், கொழுகாறு-கலப்பையின் முனையில் உள்ள இரும்பு, மனை-மனைவிமார், குறித்து-எண்ணி செறியும்-நிறையும், ஒரு-ஒப்பற்ற, குடி-வேளாளர் குடி.

    விளக்கம் : உமாதேவியார் திருமேனி, “அம்தளிர்மேனி அரிவை” என்றும், “வருமாந்தளிர்மேனி மாது” என்றும்