மலர
மலர் ஆத்தி ஆயிற்று.
இதனையே, “தாதனித் தொடையலான்” என்று ஈண்டுக் கூறப்பட்டது.
சேக்கிழார் அனபாயச்
சோழன் கவரி வீசப்பெற்ற நிலை உற்றனர் என்பது அவரது வரலாற்றில் அறிகிறோம். “அரசனும்கூட
ஏறி முறைமையினால் இணைக் கவரி துணைக்கரத்தால் வீச” என்று சேக்கிழார் புராணத்து வருதல் காண்க.
புலவர்கட்கு மன்னர்கள்
கவரியோ சிவிறியோ வீசிக் காற்றை எழுப்பி அவர்களைக் குளிர்வித்தல் தொன்று தொட்ட வழக்கமே
ஆகும். இதனை நமது புறநானூற்றைக் கொண்டும் நிறுவலாம்.
மோசிகீரனார் என்பவர்
ஒரு புலவர். சேரமான், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணக் சென்றார். அப்போது
அவன் அரண்மனையில் இல்லை. புலவர் நெடுந்தொலைவிலிருந்து வந்த இளைப்பால், முரசு என்னும் அரசாங்க
வாத்தியம் வைக்கப்படும் கட்டிலில் ஏறிப் படுத்து உறங்கிவிட்டார். அப்போது முரசும் நீராடிப்
பூசை பெற்று வர வெளியே சென்றுளது. அம்முரசு கட்டில் தெய்வம்போல் கருதப்படும் முரசு வைக்கப்படும்
சீரிய இருக்கையாகும். மெத்தென்று அமைக்கப்பட்டதாகும். அதன்மீது எவர் ஏறினும் கொலைக்
குற்றத்திற்கு ஆளாவார். இவ்வளவு சட்ட திட்டங்களோடு கூடிய முரசு கட்டிலில் புலவர் ஏறி நன்கு
உறங்குவாராயினர். வெளியே சென்ற அரசன் அரண்மனைக்குள் வந்தனன். முரசு கட்டிலில் படுத்துறங்கும்
புலவரைக் கண்டனன். வேறு எவரேனும் அங்குப் படுத்திருந்திருப்பரேல், அவரை தனது வாளால் இரு கூறு
படுத்தி இருப்பன். ஆனால், யாது செய்தனன்? புலவர் உறங்கி எழுந்துணையும் விசிறி கொண்டு வீசலானான்.
துயில் உணர்ந்து எழுந்த புலவர் இதனைப் பாராட்டி ஒரு செய்யுளைப் பாடினர். அதுவே,
|