என
என்பர். இது மழைத்துளியை
உண்டு பாடவல்லதாம். “துளி நசைவேட்கையான் மிசை பாடும்புள்” என்று கலியினுள்ளும், “துளி நசைப்புள்”
என்று புறநானூற்றுள்ளும், “தன்பாடிய தளி உணவின்புள்” என்று பட்டினப்பாலையுள்ளும் வருதல் காண்க.
சீவகசிந்தாமணியில் “வானம்பாடி மேகத்துப் பிறந்த துளியையே நச்சிப் பாடுமாறு போல” என்று
உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். தட்சயாக பரணியில் “வானம்பாடியே கூடிமடுப்பவே” என்று
வரும் தொடரில் வரும் வானம்பாடி என்பதற்குச் சாதகப் புள் என்று உரைகூறியதைக் காணவும்.
சகோரப் பறவை, நிலவு ஒளியினை உண்ணும் தன்மையது. இதனை முத்துக் குமாரசாமிப் பிள்ளைத் தமிழில், சகோரப்பறவை, புன்னகையை நிலவொளி எனக் கருதி அருந்த விழைந்தது” என்பதை, “அரும்பு நகையைச் சகோரப் புள்
அருந்த” என்றும், “நிலவொடு இளவெயிலும் அளவளாய் உணணச் சகோரம் வெஃகும்” என்றும் கூறுதலை அறியவும்.
சூரியனைத் தாமரையின்
கணவன் எனக் கூறுதல் மரபு. இதற்குக் காரணம் அவனது வருகையினைக் கண்டதும், தாமரை மலர்வதால்
என்க. “செங்கமல முகமலரச் செய்ய வெய்யோன் உதயம் செய்தான்”எனக் கம்பராமாயணத்தில்
வருதல் காண்க. சந்திரனைக் குமுத மலரின் கணவன் என்பதால் சூரியன் தாமரை நாயகன் எனப்படுகிறான்.
இதனைக் கந்தபுராணம்,
திங்கள் தன்குறை உணர்த்தவாய்
திறந்தெனச் செய்ய
பங்க யங்கள்போ தவிழ்ந்தன
குமுதங்கள் பலவும்
தங்கள் நாயகன் உடைந்தது
நோக்கியே தபனற்
கங்கை கூப்பிய திறனென
ஒடுங்கிய அன்றே
என்று கூறுதல் காண்க.
சூரியன் வரும் தேர்
ஏழு குதிரைகள் பூட்டப்பட்டது என்பது கவிமரபாதலின் “ஏழுதாம் பரித்தேர்” என்றனர்.
|