பக்கம் எண் :

New Page 1

 

       சிறுதேர்ப் பருவம்

773

    வேதியர்கள் யாகாதி காரியங்கள் செய்கிறபோது ஓமதூமம் மிகுதியாக ஏழும் என்பதைச் சேக்கிழார் “உளங்கொள் மறை வேதியர் தம் ஓம தூமத் திரவும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  தூமத் திரவும் என்றதனால் புகையின் கருமையினையும் மிகுதியையும் அறியலாம்.

    வேதியர்கள் எவ்வாறு வேள்வி செய்வர் என்பதைச் சேக்கிழார் இயற்கை வளத்தைக் கூறும்போது அழகுறப் பாடிக் காட்டி உள்ளனர்.

பரந்தவிளை வயல்செய்ய
    பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
    கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரநீள் இலைக்கடையால்
    ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆ குதிவேட்கும்
    தகைஎன மயணந்துளதால்

என்னும் பாடலைப் படித்துணரவும்.

    இன்னோரன்ன வேள்விக் கருத்துக்களை உளம் கோண்டே திரு. பிள்ளை அவர்கள் “எய்குறை ***  பூம்புகை வானாடு பொலியும்” என்றனர்.                       

(97)