பக்கம் எண் :

ஒனறத

 

       சிறுதேர்ப் பருவம்

779

ஒனறதாய் அநேக சத்தி
    உடையதாய் உடனாய் ஆதி
அன்றதாய் ஆன்மா வின்தன்
    அறிவொடு தொழிலை ஆர்த்து
நின்றபோத் திருத்துவத்தை
    நிகழ்த்திச்செம்பி னில்க ளிம்புபேய்ந்து
என்றும்அஞ் ஞானம் காட்டும்
    ஆணவம் இயைந்து நின்றே

என்று சிவஞான சித்தியாரும் கூறுதல் காண்க. இப் பாசம் இருள் வடிவினதாதலின், “வெங்கடிய ஆணவ மலக் குருட்டு இருள்” என்றனர். பாசம் இருள் என்றதனால், பதிஒளி உடையது என்பது பெறப்படுகின்றதன்றோ? திருவெண்ணீற்றுச் சாதனமும் மலத்தை ஓடும்படி செய்யும் என்ற குறிப்பே மூன்று வரிகளில் அறியப்படுவதாகும்.

    மும்மலங்களை நீறு செய்வதனால் நீறு என்ற பெயர் பெற்றதாக “நீறு புனைவார் வினையை நீறு செய்வதாலே, வீறுதனி நாமமது நீறென விளம்பும்” என்று கூறப்படுதலால் அறியலாம்.  மேலும் வள்ளலார்,

துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
கையிலேறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்
குயிலேறிய பொழில்சூழ் திருக்குன்றே றிநடக்கும்
மயிலேறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே

என்றும் கூறுதலால் வெண்ணீற்றுச் சாதனத்தால் மலம் இரிந்தோடும் என்பது பெற்றாம்.

    உலகில் தாமரை மலரும்போது ஆம்பல் குவியும் என்பதை நாம் பார்க்கிறோம்.  தாமரை பகலில் சூரியனைக் கண்டதும் மலரும்.  ஆம்பல் சூரியனைக் கண்டதும் குவியும்.  இதுபோல ஞானசூரியனாம் சேக்கிழார் பெருமானாரைக் கண்டதும் பரசமங்களாகிய ஆம்பல்கள் குவிந்தன எனச் சேக்கிழாரது மாண்பினைக் குறித்தனர் ஆசிரியர்.