பக்கம் எண் :

790

             சிறுதேர்ப் பருவம்

பாடல் தேவாரம் எனவும், சம்பந்தர் பாடல் திருக்கடைக் காப்பு எனவும், சுந்தரர் பாடல் திருப்பாட்டு எனவும் அறிஞர் பெருமக்களால் கருதப்பட்டு வருதலின் இவ்வாறு கூறினர் என்க.  சாந்தலிங்க சுவாமிகள் பாடிய நூல்களுக்கு உரை கண்ட திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் முப்புலவர்கள் பாடிய பாடல்களை மேற்கோளாக எடுத்து ஆளுகையில் இவ்வாறே மூவர்களின் பாடல்களை மேலே கூறியவாறு தனித் தனிப் பெயர்களைக் கூறிக் குறிப்பிட்டுள்ளனர்.

    தமிழ் என்பது மூவர் பாடிய பாடல்களையே குறிக்கும் என்ற குறிப்பு “மொழிக்கு மொழி தித்திப்பாகும் மூவர் சொலும் தமிழ்” என்று தவராச சிங்கமாம் தாயுமான சுவாமிகள் பாடுதலால் அறியலாம்.

    ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள் மூவர் பாடல்களின் பொருளை நன்கு ஆராய்ந்து பல பாடல்களைப் பாடினர் என்று கூறியதன் கருத்துப் பெரிய புராணத்துள் இம்மூவர்களின் வரலாறு சிறப்பாக எடுத்துப் பேசப் பட்டதனால் என்க.  என்றாலும், சேக்கிழார் சைவ சமய குரவர்களுள் நால்வர்களுள் ஒருவரான மாணிக்க வாசகர் பாடியுள்ள திருவாசகம் என்னும் நூலையும் நன்கு ஆய்ந்து பாடியுள்ளார் என்பதையும் நாம் மறத்தல் கூடாது.  இக் கருத்தை நிலைநாட்டச் சில எடுத்துக்காட்டுக்களை ஈண்டுக் காண்போமாக.

புத்தன் முதலாய புல்அறிவில் பல்சமயம்
தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால் தோணாக்கம் ஆடாமோ

என்பது திருவாசகம்.  இத்தொடரைச் சேக்கிழார்,

வந்து மிகைசெய் தாதைதாள்
    மழுவால் துணித்த மறைச்சிறுவர்
அந்த உடம்பு தன்னுடனே
    அரனார் மகனார் ஆயினார்