வ
வார்கொண்ட வனமுலையாள்
6. வார்கொண்ட
வனமுலை எனும்கவியுள் உயர்சைவ
மாண்பினர்கள்
தலைவணக்கி
வாயார வாழ்த்தித்
தியானித் திடச்சங்க
மங்கைவரு
சாக்கியர்முதல்
ஏர்கொண்ட
புகழ்கொடைவை வேல்அடையும் அடையுற்றும்
எய்தாதும் ஆகி
நின்ற
இனியநகர் அடையும்ஏற்
றொளிர்கின்ற அறுவரையும்
இறுவரையும் ஏத்தெடுப்பாம்
கார்கொண்ட
அமணசிந் தாமணியை வளவர்கோன்
கங்குல்பகல்
ஆராய்தரக்
கண்டொழித் தாவதுஇது
வேஎன்று தொண்டர்தம்
கத்துவம்
கருதஉய்த்துப்
பார்கொண்ட மன்னர்அல்
லவைநீக்கி நல்லவை
பரித்திடச்
செயல்அமைச்சர்
பண்பெனல் தெரித்தகுன்
றத்தூர் உதித்தஎம்
பரமனைக்
காக்கஎன்றே
[அ சொ]
கார்கொண்ட - கருமையைத் தன்னிடம் கொண்ட, அறிவு மயக்கங் கொண்ட எனினும் ஆம். அமண சிந்தாமணி
- சமணர்களின் காவியமான சீவக சிந்தாமணி. வளவர்கோன் - சோழர் மரபின் மன்னனான அநபாய
சோழ மன்னன். கங்குல் - இரவு, ஆவது - இப் பிறவியிலும், மறு பிறவியிலும் நன்மை ஆவது
(தருவது), இதுவே - சிவனடியார்களின் வரலாறுகளே, மகத்துவம் - பெருமை, உய்த்து - சிவனடியார் பற்றில்,
வரலாற்றில் மனத்தைச் செலுத்துமாறு செய்து, பார் - பூமி, மன்னர் - அநபாயர், அல்லவை - தீய
எண்ணத்தை, பரித்திட - மேற்கொள்ள, தாங்க, வார்கொண்ட வனமுலை என்பது, திருத் தொண்டத் தொகையில்
வரும் ஆறாவது செய்யுளின் முதல் குறிப்பாகும், கவி - பாடல்
|